Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் - 5




பசுவய்யா


பூனைகள் பற்றி ஒரு குறிப்பு


பூனைகள் பால் குடிக்கும்.


திருடிக் குடிக்கும் கண்களை மூடிக்கொள்ளும்


மூடிய கண்களால் சூரிய அஸ்தமனம் ஆக்கிவிடும்


மியாவ் மியாவ் கத்தும் புணர்ச்சிக்கு முன்


கர்ண கடூரச் சத்தம் எழுப்பும் எப்போது


ம் ரகசியம் சுமந்து வளைய வரும் வெள்


ளைப் பால் சம்பந்தமாக சர்வதேசக் கொள்


கை கொண்டவை பெண் பூனைகள் குட்டி போ


டும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்


று அல்லது நான்கு அல்லது குட்டிகளுக்கு மி


யாவ் மியாவ் கத்தச் சொல்லித் தரும்.


வாலசைவில் அழகைத் தேக்கிச் செல்லும் இ


ரண்டு அடுக்குக் கண்களில் காலத்தின் குரூரம்


வழியும் பூனைகள் குறுக்கே வராமலிருப்பது


அவற்றுக்கும் நமக்கும் நல்லது குறுக்கே

தாண்டிய பூனைகள் நெடுஞ்சாலைகளில்

தாவரவியல் மாணவனின் நோட்டில் இலை போல்

ஓட்டிக்கிடப்பதைக் கண்டதுண்டு வேறு பூனைகள்


குறுக்கிட்டுத் தாண்டும் சிறிய


பூனைகள்தான்பெரிய பூனைகள் ஆகின்றன


பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம் அவற்றின்


மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம்


அவற்றின் பேறுகால அனுபவங்கள் பற்றி


நாம்யோசிப்பது காணாது இருப்பினும் அவை


இருக்கின்றன

பிறப்பிறப்பிற்கிடையே..


(நன்றி : பசுவய்யா 107 கவிதைகள்)

Comments