Skip to main content

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......





த.அரவிந்தன்


பூனையின் உலக இலக்கியம்---------------------------------------------------


எலி சாப்பிடாத


ஒரு பூனையை எனக்குத்தெரியும்



வீட்டிற்கு வரும்


லியோடால்ஸ்டாய், அன்ரன் செக்கோவ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி


காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே


மரீயாலூயிஸு பொம்பல், மார்கெரித் யூர்ஸ்னார்,


இஸபெல் அலெண்டே, நவ்வல் அல் ஸுதவி


நதீன் கோர்டிமர், ஆல்பெர் காம்யூ, ஆஸ்கர் ஒயில்ட் - எனச்


சகலரின் எழுத்தையும் படிக்கும்



மழையில் நனையும்


ஒரு பூனைக்குட்டி மீது


பரிதாபம் கொள்ளும் பெண் பற்றி


எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய


'மழையில் பூனை'* சிறுகதையை


ஒருகுளிர்காலத்தில் சொன்னதிலிருந்து


அந்தப் பூனைக்குக் கட்டுப்படாத


பூனைகளே இல்லையாம்


உச்சிவெயில் ஒழுகிக்கொண்டிருந்த


சன்னலோரம் ஒருநாள்


சினுவா ஆச்சிபி "சிதைவுகள்' நாவலின்


இருபதாம் அத்தியாயத்தைப்


படித்துக் கொண்டிருந்தபோது


எதேச்சையாய் அதனிடம் கேட்டேன்:


'திருட்டுத்தனமாய் நீ எலிகளைச் சாப்பிடுகிறாயாமே'



வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டது.


* தமிழில்: திலகவதி

Comments