Skip to main content

ஸில்வியா ப்ளாத் இரண்டு கவிதைகள்






தீப்பாடல்

பசியப் பிறந்தோம்


குறைகொண்ட தோட்டமிதற்கு..


ஆயின்


புள்ளியாய்த் தெறித்துத் தேரைபோல்


மறு கொண்ட


முட்செடி பலதில்


பகையுடன் நழுவும் எம் காவலர்


தம் கண்ணி வைக்க


சிக்குமதில்


மானும் சேவலும் மீனும்


ஏன் எல்லாம் நன்றேகுருதி


சிந்தும் தந்திரமாக



யாவும் சீர்குலைந்து நிற்கும்


அவன் சீற்றமுற்ற வீண்சாமானினின்று


தேவதை-ஏதோ வடிவ ஆடையுடுப்பதை


ெட்டியழிப்பதேநம் கடனென்ப



நேர்-விசாரணையேதும்


திறக்காது


சாமர்த்தியமாய்ப் பிடித்து


ஒளிரும் எம் செயல்


ஒவ்வொன்றாய் வண்டலாக்கி


மீண்டும் உருவற்ற


சேற்றுமண்ணாக்கி


புளிநொதித்த


வானெனும் ஆடையாய் மூட


இனிய உப்பும்


களையின்


முறுக்கிய தண்டும்


யாம்


வழியின் கடைக்கோடியில்


வைத்துச் சமாளிக்க


செங்கதிர் எரித்த


யாம்


ரத்தக்குழாய் பலதின்


முட்கம்பி வலைப்பின்னலில்


அடுக்கிய தீக்கல்


உருளத் தூக்குவோம்


மறமான காதல், கனாவென


கறார்-அழலை நிறுத்த அன்றி


வா, என் காயம்படச் சாய்..


நின்றெரி


நின்றெரி..




சொற்கள்

கோடரிகள்.


அவை வீழும்


மரத்தில் தொடங்கும்


வட்டங்கள்.மையத்தினின்றும்


குதிரைகளாய்ப் பாயும்


எதிரொலிகள்.



கண்ணீராய்ப் பொங்கும்


மரச்சாறு.


பாறைதனில்


தன் கண்ணாடி


மீண்டும் நிறுவ


முயலும் நீராய்.



பசிய களையுமுண்ட


வெண்கபாலம்


வீழச் சுழலும்.


ஆண்டுபல கழிந்து


சாலையில் எதிர்கொண்டேன்


இவற்றை.



ஓட்டியற்று


வறண்ட சொற்கள்.


அயர்வறாக் குளம்படிகள்.


குளத்தடியினின்று


வாழ்வொன்றை ஆளும்


அசையா விண்மீன்கள்.

Comments