Skip to main content

Posts

Showing posts from May, 2009

இரண்டு கவிதைகள்

1. முகம் விபத்தில் அடிபட்டவனைத் தூக்கிச் செல்லும் அவசர ஊர்தி கடந்துபோனது வெட்டப்பட்ட வாழைமரமெனத் தொங்கிய உடல்முழுதும் ரத்தக்கோலம் அவன் உயிர்பிழைத்துவிட வேண்டுமென மனமுருக வேண்டிக்கொண்டேன் என் பயணம் முழுதும் நிழலென மிதந்துகொண்டிருந்தது அவன் சிதைந்த முகம் அவன் காதலி அவன் அலுவலகம் அவனை நம்பியிருக்கும் தம்பிதங்கைகள் எல்லாரைப் பற்றியும் நினைவு வந்தது அவன் உயிர் மிகமுக்கியமானது என்று சொல்லிக்கொண்டேன் ஆறுதலாக ஒரு சொல் மிதக்க அஞ்சவைத்து மிதந்தது மற்றொரு சொல் பத்தாண்டுகளுக்கு முன்பாக விபத்தில் அடிபட்டு இறந்துபோன நண்பனின் முகம் நினைவில் படர்ந்தது அரள விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்துகொண்ட பள்ளித் தோழியின் முகமும் அசைந்தெழந்தது அகால மரணமடைந்தவர்கள் ஒவ்வொருவராக ஆழ்மனத்திலிருந்து எழுந்து வந்தார்கள் துயரம் படர்ந்த முகங்களுடன் என்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டார்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் பேசினார்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டார்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் கண்ணீர்விட்டு அழுதார்கள் ஐயோ போதுமே என்று காதுகளை மூடி நிமிர்ந்தபோது உதடுகள் அசையாமல் உற்றுப் பார்த்த விபத்தில் சிதைந்த முகம்கண்டு உற

புத்தக விமர்சனம் - 3

அழியா கைக்கிளை ம.தவசி அவர்களின் கதைகளைப் படிக்கும்போது ஏற்கனவே கொண்டிருக்கிற தீர்மானங்கள் உறுதிப்படுகின்றன. ஒரு படைப்பைப் பொறுத்தவரை அது வெறும் அறிவுரையோ படைப்பாளியின் மேதமையை வெளிப்படுத்துகிற கருத்துக்களாகவோ இருக்காது என்பது அறிந்த விசயம். வியப்பு, ஏக்கம், நப்பாசை என்று இப்படியான விதங்களால் சாதாரண மனிதன் பெற்றதை போலவே படைப்பாளியிடமிருந்தும் அவை வெளிப்படும். சாதாரண மனிதனுக்கு பயம் என்பது எப்படி வெளிப்பட்டது? வெளிப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட பின்னர், அதை எவ்வாறு எழுத்தில் கொண்டு வர வேண்டும்? சரி, எழுத்தில் கொண்டு வருவது இருக்கட்டும் - முதலில் பேச்சில் எவ்வாறு வெளிப்படுகிறது? ஒரு புதிய முறையில் சொல்கிற விதம்....ஒரு படைப்பு இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. கிட்டத்தட்ட எழுத்து வடிவில் நமக்குக் கிடைக்கப்பெற்றது இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுதான். இது இலக்கியவாதிகள் சொல்வதல்ல - ஆய்வாளர்கள். காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்பட்டு வெளியானது - ஆதியிலே இருந்தது வார்த்தை - இப்படிச் சொல்லப்பட்டது எல்லாமும் இந்தக் கணக்குத்தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து மொழி இலக

புத்தக விமர்சனம் 2

ஆஸ்பத்திரி - நாவல் - ஆசிரியர் : சுதேசமித்திரன் - உயிர்மை பதிப்பகம் - சென்னை 18 - பக்கம் - 136 - விலை ரூ. ௮0 சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட ஆசிரியர் சுதேசமித்திரன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நாற்பது வயதிற்குள் கவிதை, சிறுகதை, நாவல் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் என்ற பெயர் பழைய செய்தித்தாளையும், எழுத்தாளர் அசோகமித்திரனையும் நினைவுப் படுத்தினால் ஆசிரியர் பொறுப்பல்ல. பக்கம் 59 - இங்கே ஒரு இடைச்செருகல் அவசியமாகிறது. இந்த நாவல் ஏழைகளையோ, அரசாங்க ஆஸ்பத்திரிகளையோ அவலங்களையோ பற்றிப் பேசுவதில்லை என்று எப்போதாவது ஏதாவதொரு மூலையிலிரூந்து சர்ச்சை கிளம்பக்கூடும். இந்தக் காலத்தில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் ஏழைகள் எந்த நாவல்களையும் வாசிப்பதேயில்லை. ஏனென்றால் அவர்களிடம் அவற்றை வாங்குவதற்கு பணம் இல்லை. இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரி எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரியான நாவல்களை வாசிப்பதே இல்லை. ஏனென்றால் அதற்கு அவர்களிடம் நேரமில்லை. இதே ரீதியில் இரண்டு பக்கங்கள் வாசகனை முன்னுறுத்தி பிரவசனம் செய்கிறார் ஆசிரியர். இந்த உத்தி மிகப் பிழைய உத்த

புத்தக விமர்சனம் -1

அந்தரங்கம் - ஆசிரியர் செல்வராஜ் ஜெகதீசன் - பக்கம் 112 - விலை ரூ.60 - வெளியீடு - அகரம், தஞ்சாவூர் கவிஞர்கள் கல்யாண்ஜிக்கும் , விக்ரமாதித்தியனுக்கும் இந்த நூலை சமர்ப்பித்துள்ளார் ஆசிரியர். கவிஞர் விக்கிரமாதித்யனின் முப்பது பக்க முன்னுரை தமிழ் புதுகவிதை வரலாற்றை கரைத்துப் புகட்டுகிறது நமக்கு. பாரதிதாசனின் கவிதை கூறல் முழுக்க முழுக்க மரபின்பாற்பட்டதே தவிர, புதிதானதுமில்லை. மிகுந்த பெயரும் புகழும் பெற்ற அவருடைய கொடை என்ற ஒன்று யோசித்தால் வெறுமேதான் இருக்க வேண்டி வரும். புதுக்கவிதை என்பதே பார்ப்பனர்களின் கொடைதான். கவிதை சோறு போடாது. கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட மாட்டார்கள். முப்பதாண்டுக் காலமாவது ஒருவன் கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு கவிதை ஊற்றுக்கண். அவ்வளவு காலம் தூர்ந்து போகாதிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தாலும் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. விக்கிரமாதித்தனின் வரிகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். நவீன தமிழ்கவிதையின் EZRAPOUND ஆன விக்கிரமாதித்யன் என்ற நம்பிராஜனால்தான் இந்த வரிகளை 2009-ல் எழுத முடியும். இந்த முன்னுரைக்காகவே இந்தப் ப

சந்தி

ம க்கள் சக்திக்கு வணக்கம். உலகத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு. மிகுந்த மக்கள் தொகை. மொழிகளலாலும், மதங்களாலும், வேறுபட்டு, பலவகையான குடிநிலங்கள், பச்சை, மருதம், நீல கடற்கரைகள், பழுத்த மலைகள், இவற்றில் வாழும் படித்த, படிக்காத மக்கள், எத்த னை எத்தனை வகைகள். எத்தனை எத்தனை திறங்கள், யாவரும், ஒருவர். இந்தியர். நீண்ட தேர்தலாக இருப்பினும், இந்த 100 கோடி மக்களில் வாக்குகளை, இந்தியாவின் நீண்டகன்ற நிலபரப்பில் ஒரு பட்டி தொட்டி கூட விடுபடாது மிகமிக அமைதியான முறையில் நடத்தி வெற்றி கண்டது மக்களாட்சி - எத்துணை வலிமையானது என்று உலகிற்கும், நமக்குமே உணர்த்தியது. பதிநான்காம் முறையான மகத்தான சாதனை. வளர்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சிக்கும், பொருளாதார தளர்ச்சி நிலையிலிருந்து மீட்சிக்கும் தங்கள் ஒப்புதலை அரசிற்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். சாதி என்றொரு தீயசக்தியின் பாதிப்பு சற்று குறைந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி, பூதாகாரமாக வளர்ந்திருக்கும் பணக்கையூட்டு சிறிது கவலையை அதிகமாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கும் வருங்காலத்தில் மக்கள் சக்தியே தீர்வுகாண வேண்டும். இந்தத் தேர்தலில் ஆட்சியை கோரியவர்களிடம், முழுமையா

ஐந்து கவிதைகள்

இன்று முத‌ல் வழிதப்பிய குறுஞ்செய்தியொன்று ஒலித்தது. வேணுகோபால் இறந்துவிட்டான் உடனே கிளம்பி வா. உண்மையில் வேணுகோபால் என்று எனக்கு யாரும் இல்லை. இன்று முத‌ல் அந்தக் கவலையும் தீர்ந்தது. முத‌ல் நிலவு இறுக மூடிக்கிடக்கும் அந்தக் குழந்தையின் கைகளை யாரோ விடுவிக்கிறார்கள். அந்தக் குழந்தை தன்னோடு கொண்டு வந்த நட்சத்திரங்கள், நிலவுகள் உ…ரு…ண்…டோடுகின்றன. கனவில் கடவுள் கோபிக்கிறார். குழந்தை சிரிக்கிறது. இரண்டாம் முறையும் நட்சத்திரங்கள், நிலவுகளை தருகிறார். அது ஒருபோதும் முதல் நிலவு முதல் நட்சத்திரங்கள் போல் இருந்ததில்லை. யாரும் சொல்லாத கவிதை இதுவரை யாரும் சொல்லாத கவிதையை எடுத்துக்கொண்டு திரும்பினேன். அ‌ங்கே நீ இல்லை. நான் இல்லை. யாரும் இல்லை. எதுவும் இல்லை. எதுவுமற்ற அதுவும் இல்லை. நீட்சி முன்பொருநாள் எவனோ ஒருவன் தன் சதைகளை அரிந்து கழுகுக்கு போட்டானாம். அவனது நீட்சியென்று அடுக்குமாடி குடியிருப்பின் என் ஜான்னலூரம் காத்துக்கிடக்கின்றன அதே புறாக்கள். *********** பாரியின் காலத்திலிருந்து கிளம்பி வந்த கொடியென்று இருசக்கரவாகனம் மீது படர்ந்தெழுந்திருந்தது. எடுக்கவா தொடுக்கவா என்றது என்னைப் பார்த்து.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......15

ஏழு ஜென்ம வதைப்படுத்தி எம்.ரிஷான் ஷெரீப் உன் மௌனத்தில் வலியுணர்த்தி எதுவும் பேசாமல் நின்று நின்று பார்த்தபடியே மெல்ல நகர்கிறாய் நீ காயப்பட்டவுன்னிதயத்துக்கு ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ ஒரு கண அரவணைப்போ தரவியலாத் துயரத்தோடு நான் எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை எனதூர்தியின் நான்கு சக்கரநிழலுக்குள் நீ வந்து உறங்கவைத்தாய் நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின் சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும் எந்தவொரு அனல்பார்வையோ, சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய் ஆறறிவாய் நீ கணங்களைச் சப்பிவிழுங்கும் பணியின் அவசரநிமித்தம் ஒரு நிமிடமொதுக்கி வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து ஏழேழு ஜென்மத்துக்குமான வேதனையில் சிக்கித் தவிக்கும் ஐந்தறிவாய் நான்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......14

வித்தியாசமான மியாவ் சுந்தர ராமசாமி எனக்குத் தெரிந்த பூனை ஒன்று நேற்று இறந்தது. சவ அடக்கத்துக்கு நாங்கள் போயிருந்தோம். என் நண்பனின் மனைவி அழத் தொடங்கியபோது என் மனைவியும் அழுதாள். குழந்தைகள் அழுதன. சில வார்த்தைகள் பேசும்படி என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான். நான் பேசத் தொடங்கினேன்: இந்தப் பூனையின் மியாவ் மியாவ் வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து வித்தியாசமானது மேலும்...

ஒரே நாளில்

“முறுக்கு மாமி வீட்டுக்குப் போகட்டுமா அம்மா?” என்று கேட்டான் கிரி. ஸ்டவ்வையே வெறித்துப் பார்த்தவாறு அம்மா சமையலறையில் உட்கார்ந்திருந்தாள். அங்கே ஒரே மண்ணெண்ணை வாசனை. “என்னமோ பண்ணு” என்று அவன் பக்கம் திரும்பாமலே சொன்னாள். கிரி குஷியாக வெளியே வந்தா ன் . ஞாயிற்றுக்கிழமை. ஐந்தாம் வகுப்பு பரிட்சை முடிந்து விடுமுறை விட்டாயிற்று. முறுக்கு மாமி வீட்டில் லாரன்ஸ் அண்ணன் இருந்தால் ஊர் சுற்றப் போகலாம். அப்போதுதான் மழை பெய்து நின்றிருந்தது. வீட்டு வாசலில் சாத்தி வைத்திருந்த கற்பனை புல்லட் வண்டியை காலால் உதைத்தான். “டட்டடட்” என்று வாயால் சத்தம் எழுப்பி இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொள்வதுபோல் முன் நீட்டி ஓடினான். ஏகப்பட்ட மழைக் குட்டைகள் இருந்த தெருவில் அவன் கவனத்துடன் புல்லட்டை வளைத்து வளைத்து ஓட்டவேண்டி வந்தது. தெரு ஓரமாய் சாக்கடைப் பள்ளத்தில் மழைநீர் ஓடும் சத்தம் கேட்டது. அந்தத் தண்ணீரில் நீளமான வேட்டியின் இரு நுனிகளையும் பிடித்து மீன்பிடி விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டுக் குமாரும் மகேஷும் இவனைப் பார்த்து கத்தியதைப் பொருட்படுத்தாமல் ஓடினான். தெருமுக்கில் வாசன் குருக்கள் அப்போதுதா

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 13 ......

சுகுமாரன் பூனை... மனிதர்கள் தவிர மற்ற பிராணிகளுடன் பழக்கமில்லை எனக்கு எனினும் உள்ளங்கைச் சூடுபோல மாறாத வெதுவெதுப்புள்ள பூனைகளின் சகவாசம் சமீப காலமாய்ப் பழக்கமாச்சு மயிலிறகை அடை வைத்த பருவத்தில் கால் குலுக்கக் கை நீட்டி விரல் கிழித்த பூனையால் 'மியாவ்' என்று நீண்ட நாள் பயந்தேன் இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள் வடுவாக மிஞ்சிய இப்போது பூனைப்பயம் பொய்த்துப் போச்சு வீடு மாற்றியபோது புரிந்தது - நன்றியின் சொரூபம் நாய்களல்ல பூனைகள் நாய்கள் மாநிதரைச் சார்ந்தவை சுதந்திரமற்றவை எப்போதோ சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை இன்னும் உறிஞ்சியபடி காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது பூனைகள் வீடுகளைச் சார்ந்தவை சுதந்திரமானவை நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு பூனையின் பார்வையில் நட்பின் கர்வம் உலர்ந்த துணியில் தெறித்த சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும் பூனைகளுடன் இப்போது பகையில்லை எனக்கு உடல் சுத்தம் சூழ்நிலைப் பராமரிப்பு ரசனையுள்ள திருட்டு காதல்காலக் கதறல் பொது இடங்களில் நாசூக்கு - என்று பூனைகளைப் புகழக் காரணங்கள் பலப்பல எனினும் என்னைக் கவரக் காரணங்கள் இரண்டு ஒன்று: எனக்குத் கடவுளுக்கும் வாகனமாய்ப

மீண்டும் வாசிக்கிறேன் 2

மலையோ மனிதன் வார்த்த......... எஸ்.வைத்தியநாதன் மலையோ மனிதன் வார்த்த கட்டிடமோ - எங்கும் நிறைந்து இருக்கும் வெளி. உயர - அழகும்கூட - எங்கும் விரிந்தேன் - வெளியோடு சேர. சேர்ந்தேன் - எங்கும் நிறைந்தேன். மலையோ வார்த்த கட்டிடமோ - எங்கும் நிறைந்து இருக்கும் வெளி.

வாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் பெயரும் இல்லை...

நான் இந்த முறை ஓட்டுப் போடலாமென்றிருந்தேன். யாருக்கு என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். என் பெயர் பட்டியலில் இல்லை என்பது இன்று 4 மணிக்குத்தான் தெரிந்தது. என் குடும்பத்தில் அப்பாவிற்கு (87 வயது), மனைவிக்கு, என் புதல்வனுக்கு, மாமியாருக்கு என்று எல்லோருக்கும் ஓட்டுப்போட பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்தன. ஆனால் என் பெயர் மாத்திரம் இல்லை. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. இதற்கு முன் பல முறைகள் நான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். காலையில் தினத்தந்தி பேப்பரைப் படித்தப்பின்தான் தெரிந்தது கமலஹாசன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது. எனக்கு இது ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது. நான் சாதாரண நபர். ஆனால் கமலஹாசன் உலகம் புகழும் நடிகர். ஆனால் அவர் தன்னை சாதாரணன், பாமரன் என்று குறிப்பிட்டுள்ளார். ஓட்டு போடுவதற்காக ஐதாரபாத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். இதனால் அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம். கமலஹாசனும் என் வயதை ஒத்தவர்தான். ஆனால் சிறந்த நடிகர். நடித்தே புகழ் பெற்றவர். அவருக்கு பிறந்தநாள் கொண்டாட என்றெல்லாம் ரசிகர் மன்றம் உண்டு. அவர் பெயர் எப்படி

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......

12 பூனைகள் அழகியசிங்கர் மியாவ்வென்று ஸ்நேகமாய்க் கத்தாமல் குட்டிகளைப் பெற்றுக்கொண்ட பூனையொன்று என் வீட்டில் அதிகம் உபயோகப்படுத்த முடியாத அறையொன்றில் போய்க் குடியிருக்க அனுமதி கேட்கத் தவற குட்டிகளோ தாய்ப் பூனையுடன் சாமர்த்தியமாய்ச் சேர்ந்தடித்தன லூட்டி ஆளைக் கண்டால் பதுங்கும் பாவனை போனால் போகிறதென்று ஓட்டைக்கொட்டாங் குச்சியில் பாலை வைத்தால் நம்மெதிரில் குடிக்க வராமல் பதுங்கிப் பதுங்கி ஆளில்லா நேரமாய்த் தொட்டு கவிழ்க்கும் அவசரமாய் முகமெல்லாம் பால் துடிக்கும் இரவில் பூனைகளின் புணர்ச்சியின் சத்தம் குழந்தையின் அழுகையாய்க் காதிலறையும் கேட்டுத் தூக்கி வாரிப்போடும் தேகம் என்றோ ஒருநாள் நடந்தது குட்டிகளுடன் தாய்ப் பூனை வெளியேற்றம் வெள்ளை நிறத்தில் பூனையொன்று இன்னொரு நாள் வரக்கண்டேன் படுக்கை அறையில் சம்சாரக் கட்டிலில் பகல் பொழுதொன்றில் சொகுசாய்ப் புரளும் காட்சியைக் கண்டு பதறிப்போனேன். பார்ப்பதற்குப் பிடிக்காத குண்டுப் பூனையொன்று மாமிசம் விரும்பாத என் வீட்டில் மீன்களைக் கடித்துத் துப்ப அண்டை வீட்டாரின் தேவை இல்லாத மனவிரிசல்களுடன் நாற்றம் குடலைப் புடுங்கியது. அட்டகாசம் பண்ணும் பூனைகளே போய் வாருங்க

பின்னற்தூக்கு

சிறுகதை ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள். செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத்தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப்பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது. எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த வி

நட்சத்திரங்கள் - தொகுதி 1

எப்பொழுதும் இருக்கும் யுத்தம் கண்ணீரும் நினைவுகளும் கோபத்தின் மறுபிறவி உன்னிடம் பேசுவதற்கு வார்த்தைகளை சேமித்துக் கொண்டிருக்கிறேன் உன்னிடம் மட்டும் பேசுவதற்கு பொய்யின் தூய்மை தோல்வியுற்ற மனம் நிலவின் வசியம் உலகையே அழித்த துப்பாக்கி மிச்சம் இருக்கின்றது இன்னும் ஒரு தோட்டா பிரியும் பொழுது நினைவுப் பரிசு கேட்ட என் தோழியே அப்படியெனில் நம் நினைவுகள் ... ? புளிய மரத்திற்கு அடியில் சித்தார்த்தன் சிகரெட்பிடிக்கிறான் தேவதையின் நிழலுடன் ஒரு குரல் என்னை நோக்கி வருகிறது நான் இறந்துவிட்டேன் எங்கே என் மனைவி மின்னலுக்கு ஒரு கவிதை இ டிக்கு ஒரு கவிதை மழைக்கு ஒரு கவிதை புழுதி பார்த்தோம் எழுதிப் பார்த்தோம் இன்னும் எழுதுவோம் எழுதிக் கொண்டே இருப்போம்

எஸ். வைதீஸ்வரனும் மெளனி கதைகளும்....

நேற்று என்று நினைக்கிறேன். இல்லை இல்லை முந்தாநாள் இரவு (06.04.2009) வைதீஸ்வரனிடமிருந்து ஒரு போன் மெளனி கதைகள் புத்தகம் கேட்டு. வைதீஸ்வரன் என்னிடம் புத்தகம் கேட்டு எப்போதும் போன் செய்ததில்லை. அதுவும் மெளனி புத்தகம் ஏன் கேட்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. என்னைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மெளனி, புதுமைப்பித்தன் , அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகள் கைடு மாதிரி. வைதீஸ்வரன் இல்லாமல் வேறு யாராவது அந்தப் புத்தகத்தை கேட்டிருந்தால், இல்லை என்று சொல்லியிருப்பேன். கேட்டது வைதீஸ்வரன் என்பதால் என் புத்தக அலமாரியில் போய்த் தேடினேன். மெளனி புத்தகம் கிடைத்ததோடல்லாமல் வேறு ஒருபுத்தகம் ஒன்றை புரட்டிப் பார்க்கும்போது இரு கடிதங்கள் கீழே விழுந்தன. எடுத்துப் புரட்டிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள். எனக்கு ஆச்சரியம். அக்டோபர் மாதம் 2001ஆம் ஆண்டு எழுதிய அக் கடிதத்தை ஏன் விருட்சத்தில் பிரசுரம் செய்யவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எந்தக் கடிதம் எழுதினாலும் சுந்தர ராமசாமி பதில் எழுதி விடுவார். அழகாக டைப் செய்து கீழே சுரா என்று கையெழுத்திடுவார். விருட்சம் வெளியீடாக நான் சில புத்தகங்களை அவரு

புத்தக விமர்சனங்கள்

நவீன விருட்சம் ஆரம்பித்த (1988ஆம் ஆண்டு) ஆண்டிலிருந்து அதில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியுள்ளேன். நினைத்துப் பார்த்தால் இப்போது என்னால் அதுமாதிரி புத்தக விமர்சனங்கள் எழுத முடியவில்லை. இருந்தும் நான் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். த பழமலயின் 'சனங்களின் கதை' த பழமலயின் 'சனங்களின் கதை' என்கிற கவிதைத் தொகுதியில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்கலாம். மிக எளிமையான வார்த்தைகள் மூலம் ஊரையும் சுற்றத்தையும் வெளிப்படுத்துவது. உள்ளது உள்ளபடியே கூறுவது. எடுத்தவுடன் எதிர்படும் 'அம்மா' என்கிற கவிதையில் 'முற்றத்துப் பவழமல்லி நீ மறந்தும் நினைத்தும் அழும் என்கிறபோது, மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலையில் கவிதை வெளிப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும், கூடவே நயம் செறிந்த வார்த்தைகளையும் எந்தவித பகட்டுமின்றி வெளிப்படுத்துகிறது. அப்பா என்கிற கவிதை 'கடாவை வெட்டுகையில் கண்ணீரும் வடிப்பார்? கருப்பனார் சாமிக்குப் பன்றியும் வளர்ப்பார்? படைக்காமல் உண்பது 'பழையது' மட்டும் என்கிற தொடக்க வரிகளுடன் அபாரமாக ஆரம்பமாகிறது. இக் க

மீண்டும் வாசிக்கிறேன் 1

நிமல விஸ்வநாதனின் மூன்று கவிதைகள் 1. ந ட்பு நானுன்னை வெறுக்கவில்லை நானுன்னோடு சண்டை போட விரும்புகிறேன் - நன்றாக கவனி நண்பா, விரும்புகிறேன் உன்னோடு சண்டை போட. எனினும் இதிலிருந்து இன்னொன்றும் நீ சுலபமாய் புரிந்து கொள்ளலாம் - நான் சண்டை போடாத எல்லோரையும் நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை. 2. நிலை மத்தியானம் தூங்கினால் மாலையில் என் மனம் குற்றமுணரும் தெரிந்தும் வேலைதேடும் நான் எப்படியோ இன்று மத்தியானம் தூங்கிவிட்டிருக்கிறேன்.... திடீரென காறிக் கமறிய காகங்களின் ஒப்பாரி. கிழித்தெறிந்து விட்டது அதையும் இப்போது... கனவுக்கு வேலி கட்டிய கைசலிப்பில் மளாரென எழுந்திருக்க முடியவில்லை என்னால் வாசலுக்கு வருகிறேன் தெரிகிறது - இன்றேனோ கருணை காட்டாத மின் கம்பிகள் - விழுந்து கிடக்குமொரு கறுப்பைச் சுற்றும் கறுப்பு நிறங்களின் தாறுமாறில் பல்லிளிக்கும் மேலை வானின் வெள்ளைச் சூரியன். அங்கே நிற்கின்ற நிலையில் எனக் கொன்றும் புரிகிறது - நடுத் தெருவில் அப்போது தான் புணர்ந்திறங்குகிற ஆண் கழுதையின் கண்ணில் கசியும் சோகம். 3. விடுதலை மாசு மறுவின்றி வெம்பரப்பாய் விரிந்து கிடக்கும் மத்தியான வெளியில் படபடத்துப் போகும் வச

அபார்ட்மெண்ட் பித்ருக்கள்

சற்று முன்தான் சொத்தென்று விழுந்தது மின்சாரம் தாக்கி அடிக்கடி பார்க்கும் சாவுதான் இரண்டு நாளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பெரிய காக்கை இறந்துக் கொண்டிருக்கிறது அலகு திறப்பதும் மூடுவதுமாக இறுதி கணங்களின் துடிப்பு குச்சி கால்களிலும் இறக்கைகளும் குறுக்கும் நெடுக்குமாய் படபடத்துப் பறந்தபடி அபார்ட்மெண்ட் டிரான்ஸ்பார்மர் மேல் சக காக்கைகள் ஓலமிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறது ஒரு காக்கை காக்கையாக சாவதை இவர்களுடன் ஏழு மாடி ஜன்னல்களிலும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பித்ருக்களின் உறவினர்களும் காக்கை காக்கையாக சாவதை

இரங்கல்கள்

வைதீஸ்வரனின் தாயார் இறந்த தினத்தன்று அவர் வீட்டுக்குச் சென்றபோது நிறைய ஐம்பதாண்டு கால நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. எஸ் வி சகஸ்ரநாமம் என்பவர் போன்றோரின் விடாமுயற்சியில்தான் எம்.கே தியாகராஜ பாகவதர் , என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் சிறை மீட்புக்கு வெற்றி கிடைத்தது. அப்போது இந்தியா சுதந்திரம் அடையவில்லை. கடைசி சரணாலயம் இங்கிலாந்திலுள்ள பிரிவி கவுன்சில் என்பது. வி.எல் எதிராஜ் என்பவர்தான் அதற்குரிய வக்கீல். ஏராளமான செலவு. எஸ் எஸ் வாசனிட மிருந்து கைப்பட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை சிறை மீட்பு நிதிக்காகப் பெற்றார் என்று கூறுவார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தபோது அவருடைய நாடகக் குழு செயலிழந்து போகக்கூடாது என்று எஸ் வி சகஸ்ராமம் அக் குழு நாடகங்களைத் தினசரி அரங்கேற்ற வழி செய்தார். அப்படி நடிக்கப் பட்டதுதான் 'மனோகரா' நாடகம். அதில் மனோகரனாக நடித்தது. கே. ஆர் ராமசாமி. நாடகத்தில் வரும் 'செயின்' சீன் மிகவும் புகழ் பெற்றது. இது திரைப்படத்திலும் வரும். மேடையில் பொருந்தி போவது, திரைப்படத்தில் அபத்தமாகத் தோன்றும். அதில் இந்த 'செயின்' சீனும் ஒன்று. சிறைப் பிடித்து வரும் க

ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..

சிறுகதை ஷார்ஜாவின் அதிகாலை 04:30 மணி; முதலில் டைம்பீஸில் அலாரம் அடித்தது. சுரேந்திரன் எழும்பவில்லை. ஏற்கெனவே முழிப்பு வந்து இன்னும் ஏன் அலாரம் அடிக்கவில்லை என்ற கேள்வியுடன் புரண்டு கொண்டிருந்த பியூலாராணி தான் அலாரத்தை நிறுத்தினாள். மீண்டும் 4:40க்கு கைத்தொலை பேசியில் அலாரம் அடித்தது. அப்போதும் அவன் விழிக்க வில்லை. இம்முறையும் பியூலா தான் எழுந்து அலாரத்தை அணைத்தாள். சரியாக அணைத்திருக் கிறோமா என்று விளக்கைப் போட்டு சரிபார்த்துக் கொண்டாள். ஏனென்றால் கைத்தொலைபேசியில் அலாரம் சரியாக அணைக்கப்படாவிட்டால் ஒவ்வொரு பத்து நிமிஷத்திற்கொரு முறை அலறித் தொலைக்கும். அசந்து தூங்குபவனைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது. தூக்கம் எத்தனை பெரிய வரம்! அவளுக்குத் தான் எவ்வளவு முயன்றும் அந்த வரம் வசப்படுவதே இல்லை. அவள் ஆழ்ந்து தூங்கி அனேக நாட்களாகி விட்டது. மசூதியிலிருந்து அதிகாலைத் தொழுகைக்கான 'பாங்கு' ஒலிக்கத் தொடங்கிய போது இலேசாய் புரண்டு படுத்தான். இனிமேல் இவனை உறங்க விட்டால் காலதாமதமாகி கம்பெனி வண்டி இவனை விட்டு விட்டுப் போய் விடும் என்பதால் தூங்குபவனைத் தட்டி எழுப்பினாள். "ப்ளீஸ் பியூலா; இ