Skip to main content

பார்டர் அனுபவங்கள்..



நான் இப்பொழுது ஒரு
பள்ளத்தாக்கிற்கு முன்புள்ளேன் ..

பனிக்கட்டிகள் என்னை சுற்றி
படர்ந்துள்ளது ..

வாடைக்காற்று இதயத்தை

தொட்டு செல்கிறது ..

பெயர் தெறியா பறவையொன்று
"
க்கி க்கி" என சப்தமிட்டுக்கொண்டே
வானில் பறந்து கொண்டுள்ளது ..

கவிதை புத்தகம்

கையில் வைத்துள்ளேன்

கம்பனி கமாண்டரின்
விசில் சுப்தம் கேட்கிறது ..

சாய்த்து வைத்திரிந்த
இன்சாஸ் துப்பாக்கியை
எடுத்துகொண்டேன் ..

இப்போது


கடமையையும்
கவிதையையும்
சுமந்துகொண்டு செல்கிறேன் ..



Comments