Skip to main content

வந்தமர்ந்து கொண்டது பூனை








கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை
அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில்
அர்த்தமுணர நினைக்காது
வால் வளைத்து ஓரமாய்த்தான்
சுருண்டு படுத்துள்ளது
உணரலில்லாது நிதானமாய்
வரி தாண்டியிருக்கக்கூடும்
தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து

Comments

அன்பு சென்ஷி,

’கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை’

கவிதை முதல் மூன்று வரிகளில் முடிந்து விடுகிறது, ஏனைய வரிகள் அதன் நீட்சி என்றே படுகிறது எனக்கு.

அன்புடன்,
ராகவன்
shenshi,

enakku pitiththirukkiRathu nanba.

vaazhththukkal.