Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....7





கடந்த 2 வாரங்கள் கும்பகோணத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். காலையில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்றால் வர இரவு ஆகிவிடும். திரும்பவும் காலையில் மயிலாடுதுறையிலிருந்து. நிச்சயமில்லாத பிழைப்பு என்பார்களே அப்படித்தான் இருந்தேன். ஆனால் வண்டியில் ஒரு மணி நேரப் பயணத்தில் தினமும் இந்துவையும் தினமணியையும் படித்துவிடுவேன். சால்மன் ரிஷ்டியின் ஷாலிமர் தி க்ளௌன் என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டு வருகிறேன். புத்தகம் படிப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இல்லை. புத்தகம் படிப்பதும் ஒரு அற்புதமான ஒன்றாகத்தோன்றுகிறது.

சமையல் அறையில் சில புத்தகங்கள் என்ற பெயரில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியிருக்கிறேன். திரும்பவும் எழுத ஆரம்பித்து விடுவேன் என்று தோன்றுகிறது.

திங்கள் கிழமையிலிருந்து மயிலாடு துறை சீர்காழி என்று பிழைப்பு நிச்சயமாகிவிடும். ஆனால் கணினி சென்னையில்தான் இருக்கிறது. அங்கு லாப்டப் வாங்கலாமா இன்னொரு கணினி தயார் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கணினியில் எழுத ஆரம்பித்து பேப்பரில் எழுதும் பழக்கம் போயே விட்டது.

கணினி இல்லாமல் கை ஒடிந்ததுபோல் ஆகிவிட்டது. கடந்த 2 வாரங்களாக மழை. பல இடங்களுக்கு நடந்தே செல்கிறேன். இதனால் டூவீலர் இல்லாத குறையும் மனதில் உறுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

மயிலாடுதுறையைவிட கும்பகோணம் இன்னும் வசீகரமாக இருக்கிறது. கூட்டம். கோயில்கள். என்று அமர்களமாக நல்ல களையாக கும்பகோணம் தெரிகிறது. பலதரப்பு மக்கள் வந்தவண்ணம் போய்வண்ணம் இருந்து கொண்டிருந்தார்கள்.

இன்டர்நெட் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தாலும் தமிழில் அடிக்க சென்னைக்குத்தான் கொஞ்ச நாட்களாக வர வேண்டியிருக்கும். முடிந்தால் ஆங்கிலத்தில் அடிக்க முயற்சிக்கலாம். ஆனால் விருட்சத்திற்கு வரும் கவிதைகளை வளைதளத்தில் போட்டுவிடலாம்.

இந்த காலச்சுவடு இதழ் கவிதை இதழாக வந்துள்ளது. அதில் முக்கியமாக சுகுமாரன் கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுத்து பத்திரிகைதான் புதுக்கவிதையைத் தூக்கிவிட்டதாக எழுதி உள்ளார். உண்மையில் பாரதியின் வசனக் கவிதைகளுக்குப் பிறகு, புதுக் கவிதை முயற்சி ந பிச்சமூர்த்தி, க.நா.சு என்றெல்லாம் தொடங்கி விட்டது. புதுக்கவிதை என்ற பெயரை க.நாசுதான் கண்டுபிடித்தார். சுகுமார் அவருக்குப்பிடித்த சில கவிஞர்களை மட்டும் குறிப்பிட்டுவிட்டு பலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

1978 வாக்கில் ஆத்மாநாம் தொடங்கிய ழ வைப்பற்றி குறிப்பிடவே இல்லை. அதைத் தொடர்ந்து நவீன விருட்சம் கடந்த 22 ஆண்டுகளாக வருவது அவர் ஞாபகத்தில் இல்லவே இல்லை. கவிதையைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினை தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது.

எல்லார் கண்களுக்கும் எல்லோரும் தென்படுவதில்லை. நான் அது மாதிரி ஒரு கட்டுரை எழுதுவதாக இருந்தால் சுகுமாரன் கவிதையைத் தொட்டிருக்க மாட்டேன். சிலருக்கு எதாவது ஒரு ல்ர்ள்ண்ற்ண்ர்ய் கிடைத்துவிடுகிறது. அதை வைத்துக்கொண்டு அவர்கள் எழுதி விடுகிறார்கள்.

இப்போதெல்லாம் இன்னும் அதிகம் பேர்கள் கவிதைகள் எழுதுகிறார்கள். பலர் கவிதை எழுதுவதே தெரியாமல் போய் விடுகிறது.

இன்டர்நெட் வந்தபிறகு பலருடைய கவிதைகள் தெரிய வருகின்றன. அவற்றையெல்லாம் எதில் சேர்ப்பது. இன்னும்கூட கவிதைப் புத்தகங்கள் புத்தகமாகப் போட்டால் விற்பதில்லை. இதை என்னவென்று சொல்வது.

திரும்பவும் அடுத்த ஞாயிற்றுக்கிழமைப் பார்ப்போம்.

Comments

Chandran Rama said…
Sir ,
Your contribution towards modern Tamil literary movement is an open book. No self proclaiming
and mediocre so called writers and poets can deny this fact. Your "VIRUTCHAM" magazine alone is enough to establish this fact.

What more do you need?

My sincere request to you is that please dont ever get disturbed by this mediocre people.

I only wish that this narrow minded people should change their attitude..

I really wonder how is it possible for a writer or poet to think and behave in this horrible manner..!!

The fact remains that the worthy will always triumph..