Skip to main content

ரசனை

நீர்ப்பறவை நீந்தாத வரையிலும்
மீன்கள் துள்ளிக் குதிக்காத வரையிலும்
மழைத்திரவம் சிந்தாத வரையிலும்
சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடாத வரையிலும்
காற்று பலமாக வீசாத வரையிலும்
சலனமற்று கிடக்கின்ற குளத்துநீரில்
தங்கள் பிம்பத்தை ரசித்துக் கொண்டிருக்கும்
கரையோர பனைமரங்கள்

Comments

Chandran Rama said…
wonderful collection of thoughts..
simple yet inspiring
congrats
anujanya said…
இன்று படிக்கும் முதல் கவிதை. ரொம்ப அழகா இருக்கு.

அனுஜன்யா