Skip to main content

யானை

கானின் அடர்பச்சை இருளோடு
அறையுள் பிரமாண்டத்தை
கொண்டு வந்திருந்தது யானை.
யாருமற்ற ஒரு நாளில்
யானையும் மெல்ல அசைந்தது.
கால்களை உதறிவிட்டு
உடலை சிலிர்த்தபடி
உயிர்ப்பின் சந்தோஷ கணங்களை
அடிக்குரலோங்கிப் பிளிறிவிட்டு
சின்னக் கண்களால்
அறையை அளந்தது.
ஒரடி எடுத்தாலும்
அறையை விட்டு வெளியேறும்
நிலை அறிந்த யானைக்கு
இப்போது இரு முடிவுகள்.
எந்த முடிவு என்பதோ
முடிவுகள் என்னென்ன என்பதோ
நீங்கள் அறியாததில்லை
வாழ்வின் வாதை தெரியாததுமில்லை. -

Comments