Skip to main content

குடை


மழைக்காலங்களில்

மனிதர்களுக்கு முளைக்கும்

மூன்றாம் கை

மேகக் கருமை

வந்து ஒட்டிக் கொண்டது

கைகளில் தவழும் குடைகளில்

தூறல்களில் நனைந்தே

வீடு சேரும் நேரங்களில்

பைகளில் தூங்கும்

புதிதாய் வாங்கிய குடைகள்

கணினி யுகமானாலும்

குடைகளின் வடிவம் மட்டும்

மாறுவதே இல்லை

குடை மீது விழும்

மழைத்துளிகள் வருத்தப்பட்டன

நனைதலின் சுகம்

மனிதர்களுக்கு தெரிவதில்லையென

Comments