Skip to main content

லதாமகன் கவிதை

மழைபொழியும் நாளை
ஐஸ்கிரீம் வழிய
நீ பார்த்துக் கொண்டிருந்த
போதுதான்
என்
முதல் கவிதையை எழுதினேன்
நான்
o
அழும் குழந்தையை
அணைத்து சமாதனப்படுத்துவாய்
எப்பொழுதும்
மழை பொழியும் போதெல்லாம்
அழும் குழந்தாய் மாறிவிட
ஆசை எனக்கு
o
உன் கூந்தல்
வழிந்த மழையைத்தான்
தேனென சேகரித்துப்
போகிறது
தேனீக்களெல்லாம்.
o
நட்சத்திரங்களின்
எண்ணிக்கைக்கு முத்தமிடுகிறாய்
மழை நாளில்
மழை பொழிந்த வானாகிறேன்
முத்த நாளில்.
o
ஒற்றைக்குடைக்குள்
நீயும் நானும்
ஒண்டிக்கொண்டிருக்க
நிலமெல்லாம்
பூக்கள் தூவும்
காதலின் மழை
oOo

Comments