Skip to main content

பால்ய பொழுதுகள்

பட்டம் விடுவது
பம்பரம் சுற்றுவது
விடியும் பொழுதெல்லாம்
விளையாட்டுக்களிலும்
அதைப் பற்றிய நினைவுகளிலும்
கழியும்
பள்ளிக் கூட வாத்தியாருக்கு
இடது கையால்
வணக்கம் வைத்து
வாங்கிக் கட்டிக் கொள்வது
சிதறுதேங்காய்க்காக
சண்டையிடுவது
தோட்டத்து மாமரத்தில்
கல்லெறிவது
குளத்தில் பனங்காயை
தூக்கி எறிந்து
அதைத் தொட
சகாக்களுடன்
போட்டியிட்டு நீச்சலடிப்பது
இளவட்ட பசங்களின்
சேஷ்டைகளை ரசிப்பது
அவர்களின் காதலுக்கு
தூதுவனாக இருப்பது
விரக்தி ஏற்படும் தருணங்களில்
பால்யத்தின் கனவுகளை
அசைபோட்டவாறு இருப்பது
அம்புப்படுக்கையில் இருக்கும்
பீஷ்மரைப் போல்
வாழ்க்கை கொடிய கணைகளால்
எனது நெஞ்சத்தைத் தைத்தது
ஓர் நாள்
விடாது பெய்த மழையில்
நனைய யோசித்த பொழுதே
எனது பால்யம் தொலைந்தது.

Comments

selvaraj said…
Excellent writing. Nostalgia is the central theme and inspite of tonnes and tonnes of material, still alluring.Thanks to the author and the publisher.
விடாது பெய்த மழையில்
நனைய யோசித்த பொழுதே
எனது பால்யம் தொலைந்தது.
we feel it.