Skip to main content

Posts

Showing posts from July, 2011

எதையாவது சொல்லட்டுமா........49

நான் இங்கே வந்தபிறகு 2 கவிதைகள் எழுத முடிந்தது.  கவிதை என்று சொல்லும்போது ஒரு விஷயம் ஞாபகவருகிறது.  இப்படி ஒரு இடத்திற்கு வந்தால், அந்த இடத்தை வைத்து கவிதை எழுத முடியும்? எழுத முடியும் என்றால் என்னவென்று எழுதுவது?  க்ளியர் வாட்டர் பீச் என்ற இடத்திற்குச் சென்றேன்.  மதியம் நேரத்தில் படபடக்கும் வெயிலில், எல்லோரும் சத்தம்போட்டபடி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள்.  நானும் கடல்நீரில் நின்று கொண்டிருந்தேன்.  என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நண்பர், இந்தக் காட்சியை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொல்ல முடியாது.  இப்போது இல்லாவிட்டால் பின்னால் எழுதலாம் என்றேன்.  பாரதியார் காலத்தில் பாரதியாருக்கு கவிதை எழுதுவது எளிது.  தேசம் விடுதலை ஆவதைப் பற்றி எழுதலாம்.  பக்தி பாடல்கள் எழுதலாம்.  மேலும் பாரதியாரே அவருடைய கவிதைகள் சினிமா பாடல்களாக பாட ஆரம்பித்தபிறகுதான் புகழ் அடைந்திருப்பார்.  இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கு எந்தப் புகழும் கிடைக்குமா என்பது சந்தேகம்.  கவிதைத் தொகுதி அச்சிட்டால் அவர்களே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  கவிதை எழுதுவதும் ஒரு சவால். நவீன

தாகம்

                                                                                                                                                                                                              காக்கை பறந்து வந்து என் வீட்டுத்திண்டில் அமர்ந்தது. அருகில் இருந்த குடுவையில் அடியில் மட்டுமே கொஞ்சம் நீர். எப்படித்தான் எடுக்கும் என்று பார்த்துக்கொண்டிருந்தேன் அது குடுவையின் அருகே வந்தமர்ந்து வெறுமனே பார்த்து விட்டு பின் நடை பழகியது, எதையும் எடுத்து குடுவைக்குள் போடவுமில்லை நீரும் மேலே வரவில்லை பறக்கும் காக்கைக்கு ஒரு சிறிய குடுவையும் அதன் நீரும் பெரிதா ? காக்கை பறந்து சென்றுவிட்டது இப்போது எனக்குத் தாகம் எடுக்கிறது.  

நிலாவைத் தின்ற எறும்பு

நீரில் மிதந்த எறும்பு அலையினில் அசைந்து கொண்டிருந்த நிலாவை கடித்து கடித்து இழுத்தது. எறும்பின் கூர்வாய்க்குள் நிலாவின் விழும்பு இழுபடுவது போல் தோன்ற இன்னும் உற்சாகமாய் இழுக்க முனைகையில் நிலாவைத் தின்ற எறும்பின் சுவையறிந்த ஒரு பறவை எறும்பைக் கவ்விப் பறந்தது.

இரண்டாவது இரவு

தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள் களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன். மூத்ததைப்போல் மூக்கில்லை முன்நெற்றி ரோமமில்லை அவள் அசல் நான் நகல் அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில் அவள் அணிந்து அரைப்பழசாய் போன ஆடைகள் அவள் விளையாடி காது பிய்ந்த கரடி பொம்மை அவள் புதுவாசம் நுகர்ந்து,ஓரம் சுருண்ட ‘ஏழுநிறப்பூ’ பல் பதிந்த அழிறப்பர்,கம்பீரமிழந்த பென்ஸில் அவள் திருமணம் குதியுயர் காலணியாய் அதிர நடக்க என் மணமோ ஏழைச்செருப்பாய் நொய்ய நடந்தது. ஒவ்வொரு விரலிலும் இவ்விரண்டு பரிசு மோதிரமாய் அவள் மருதாணி விரல்களில் பாதி தேய்ந்தோர் மோதிரம் வெட்க நான் அதிகமாய் வலித்ததன்று. அவள் பார்த்து நிராகரித்த ஆண்மகனுடன் என் முதலிரவு. அது முதலிரவன்று, ‘இரண்டாவது இரவு’

எதையாவது சொல்லட்டுமா........48

                                                                                                                                                                                                              ப்ளோரிடாவில் இரவு 8 மணி என்பது பகல்மாதிரி தெரிகிறது.   அதேபோல் காலை எட்டுமணிக்குத்தான் சூரியன் தன் கிரணங்களை வீசுகிறான்.  வீட்டில் 24 மணிநேரமும் ஏ.சி என்பதால் ஒரே குளிர்.  நான் அடிக்கடி ஏ சியை அணைக்க வேண்டி உள்ளது.  இங்கு ஒரு பால், தயிர் வாங்கக்கூட காரில்தான் செல்லவேண்டும்.  பஸ், டிரெயின் என்பதே கிடையாது.  சைகிளை யாரும் பயன்படுத்தவில்லை. டூ வீலர் யாரும் ஓட்டுவதில்லை.  வெயில் சென்னையில் அடிப்பதுபோல் சுள்ளென்று அடிப்பதில்லை. பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியவில்லை.  Publix என்ற கடையில் ஒரு குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாம் கிடைத்து விடுகிறது.  ஒவ்வொரு சனி ஞாயிறுகளில்தான் வெளியே சுற்ற முடியும்.  மற்ற நாட்களில் மிகச் சிறிய இடங்களுக்குச் சுற்ற முடிகிறது.  சென்னையில் அண்ணா மறுமலர்ச்சி நூல் நிலையம் மாதிரி, இங்கு Broward County Library என்ற நூல்நிலையத்தைப் பார்த்தேன்.  பிரமிப்பாக இர

ஒரு கவிதை

                                                                                                              என்ன இங்கு காக்காயைக் காண முடியவில்லை? என்ன இங்கு அணில்கள் குண்டோ தரனாகத் தெரிகின்றன.. எறும்பே எறும்பே எங்கே போனீர்கள் நீங்கள் தலைதெறிக்க கார்கள் எங்கே ஓடுகின்றன மரங்கள் என்ன இப்படி ஓங்கி வளர்ந்திருக்கின்றன அசையாமல் வீடுகள் எல்லாவற்றையும் சொல்லி சொல்லி சிரிக்கின்றன

நனவிலி

                                                                                                          என்னிலை நினைத்து வருந்தவும், அதைப்பிறரிடம் கூறி ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமிடவும், பின் அவற்றைச் செயலாக்கவும், உதவிய எந்தன் மொழி எனது நனவிலி மனதிலிருந்தும் அகற்றப்பட்டுவிட்டது. அதை ஒரு வன்முறையாகப் பார்ப்பவனால் விலங்கு மனம் அவனிலிருந்து இடம் மாறியது எனக்கு இப்போது எனக்கு சிந்திக்க மொழியின்றி வெறும் உணர்வுகளுடன் வெளிச்சொல்லத்தெரியாத குழப்பத்தில் நான்  

தீற்றல்

நிலைக்கண்ணாடி பிரதிபலித்த முதல் நரை மரணம் விரிக்கும் வலை மழை நாள் சூரியனைக் காணோம் இரவு வெகு நீளம் கழுகின் நிழலைக் கண்டு அஞ்சும் கோழிக் குஞ்சுகள் மணி அடித்தாகிவிட்டது தண்ணீர் போத்தல் வாங்கப் போனவர் இன்னும் வரவில்லை வார இதழ்களை கடைசி பக்கத்திலிருந்து படிப்பது பழக்கமாகிவிட்டது சூரல் நாற்காலியில் நாளிதழ், வானொலி கேட்பாரற்றுக் கிடக்கிறது முதியவரை மரணஅலை அடித்துச் சென்றுவிட்டது தெரு விளக்குகள் எரியவில்லை அந்தகனைப் போல் இருளில் துழாவித் துழாவி வீடு வந்து சேர்ந்தேன்.

யாக்கை

  ஆழ்கடல் அமைதியாக இருக்கும் கூட்டம் கடலலையை கண்டு ரசிக்கும் மேகக் கூட்டம் படையெடுக்கும் வானம்பாடி பாட்டுப் படிக்கும் காட்டுப் பாதையில் பூத்த மலர் பறிக்க எவருமில்லை வைகறை மூடுபனி உறக்கம் கலையவில்லை திருத்தேர் வீதிஉலா பலூன் வியாபாரியை மொய்க்கும் சிறார்கள் தீபாவளி நள்ளிரவு வெடிச்சத்தம் ஓயவில்லை தக்கை அசைகிறது தூண்டிற்புழுவுக்கு ஆசைப்பட்ட மீன் பாத்திரத்தில் துள்ளுகிறது.                                          

மாற்றுத் திறன்

இருவருக்கு எதிரில் தலை குனிந்து அமர்ந்திருக்கிறான் மனைவி கோவிலில் மெய்மறந்திருந்தாள் அவனுக்குப் பேசும் திறமை குறைவாக இருக்கிறது பூங்காவில் மகள் ஊஞ்சலாடுகிறாள் வாடிக்கையாளர்களிடம் தன் நிறுவனத்தின் அருமை பெருமைகளைப் பேசக் கூசுகிறான் சதுரங்கக் காய்களுடன் காத்திருக்கிறான் நண்பன் நிறைவேற்றும் சாத்தியங்களற்ற பொய்களைச் சொல்ல இயலுவதில்லை இவன் காதலை நிராகரித்தவள் மீண்டும் வந்திருக்கிறாள் மகப்பேறுக்காக வெளியூர் மேலதிகாரியின் காதல் தோல்விகளை சாயங்கால வேளைகளில் அவருடன் குடித்துக் கொண்டே கேட்டிருக்கலாம். வேலைக்காரச் சிறுமியை வருடும் பணக்கார விரல்களை அடுத்த முறை கண்டால் வெட்டிவிட வேண்டும் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதிலும் நேர்மை தவறாத நிர்வாகம் வெளியேறும் நேர்முகத்தில் உற்பத்தித் திறன் குறைவு என்று மட்டும் குறிப்பிட்டது இடப்பற்றாக் குறையால்? இப்படிப்பட்ட இரவில் பூங்காவில் மணியடித்து கோயிலில் ஊஞ்சலாடி மகப்பேறுக் காதலியுடன் சதுரங்கம் விளையாடியதில் உற்பத்தித் திறன் உயர்ந்ததாக அந்தச் சிறுமி சொல்லிய போது தனது பிரத்யேக வனத்துள் மெல்ல மெல்ல பிரவேசித்தான்

கோடு

எறும்பின் பாதையில் ஆள்காட்டிவிரல் தேய்க்கும் சிறுமி சிரிப்பை மறந்து அமர்ந்திருக்கிறாள் வரிக்குதிரை சந்திப்புகளைக் கடக்கும் கண்ணிழந்தவர்களை யாரோ கைபிடித்துக் கொள்கிறார்கள் சாக்குக்கட்டிகளை கடந்து செல்லும் மனிதர்களைப் பார்த்தபடி சில்லறைக்குக் கீழே வரையபட்டிருக்கிறான் கைவளைந்த கடவுள்

அவலம்

Add caption கிறுக்கு ராஜத்தை ரெண்டு நாளாய்க் காணவில்லை. அக்ரஹாரமே அல்லோலப்பட்டது. ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். யாராவது இழுத்திட்டுப் போயிட்டாங்களோ? யாராவது கெடுத்து கொலை செய்திட்டுப் போயிருப்பாங்களோ? அப்படீன்னா பாடி கிடைக்கணுமே? சில சமயம் நல்லா இருப்பாளே? நல்லாப் பேசுவாளே? அப்போ அவளா எங்கேனும் ஓடிப் போயிருப்பாளோ? சதா இங்கதானே தெருத் தெருவாத் திரிஞ்சிண்டிருப்பா? காணவேயில்லையே? - என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். விஷயம் கிடைத்தால் போதாதா? அவரவர்கள் கற்பனைக்கு எப்படி எப்படியோ நீண்டது. நாணம்மா பாட்டிதான் தவியாய்த் தவித்தாள். வீடு வீடாய் ஏறி இறங்கினாள். தன் பெண்ணை யாரேனும் பார்த்தீர்களா என்று ஒருவர் விடாது விசாரித்தாள். அழுது புலம்பினாள். தள்ளாத வயதில் என்னவெல்லாம் கஷ்டம் இந்தக் கிழவிக்கு? ஆதங்கப் படாதவர்கள் பாக்கியில்லை. முடிந்தவரை எல்லோரும் உதவி செய்ய முனைந்தார்கள். தங்கள் வீட்டுப் பிள்ளைகளை நாலா பக்கமும் அனுப்பித் தேடச் சொன்னார்கள். திருவிழா நடக்கும் பக்கத்துக் கிராமத்திற்குப் போயிருக்கலாம் என்றார்கள். வண்டி கட்டிக்கொண்டு போனவர்களிடம் விசாரித்தார்கள். குறுக்கு வழியாக வயல் வரப்பில

நரியும் நிலாவும்

பௌர்ணமி இரவில் கொடியில் கொத்தாய் தொங்கிய திராட்சை நரிக்கு புளிக்கவில்லை. குதித்தது.. எட்டவில்லை.. இன்னும் குதித்தது எட்டவில்லை... எட்டு முறை முயன்ற போது எட்டாவது முறையே எட்டிற்று.. வாயில் ரசம் சொட்டச் சொட்ட கொத்து திராட்சை நரியின் வயிற்றில். பின் சற்று உற்று மேலாகப் பார்த்தது. திராட்சை தொங்கிய இடத்தில் பெரிதாய் பால் வண்ணத்தில் நிலா தொங்க சளைக்காமல் குதித்துக் கொண்டிருக்கிறது நரி... கிடைக்காத போது நரி நிலாவின் சுவையை புளிக்குமென்று சொல்லுமா.

புதிய ஊர்

நான் பார்த்துக்கொண்டிருந்த இடம் என் கனவாக இருந்தது எப்போதும் தண்ணீர் தட்டுப்படாமல் கிடைத்தது மின்சாரம் முணுக்கென்று போகாமலிருந்தது மழையும் வெயிலும் மாறி மாறி வித்தைக் காட்டிக்கொண்டிருந்தன எங்கும் பார்த்தாலும் அசையாமல் கட்டிடங்கள் காத்துக்கொண்டிருந்தன மனிதர்கள் உள்ளேயிருந்து வெளியில் வந்தார்களா அல்லது வெளியிலிருந்து உள்ளே வந்தார்களா என்பது தெரியவில்லை நடந்துபோய் பொருள் வாங்க வேண்டுமென்றால் காரைக் காட்டினான் புதல்வன் நாங்கள் அசைவற்று நின்றிருந்தோம்... 21.07.2011 1.30 pm

கட்டங்கள் சொற்கள் கோடுகள்

கட்டங்கள் வரைந்து சொற்களை உள்ளே இட்டேன் அவற்றுக்குள் தொடர்பு ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன் கட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தன சொற்கள் அடைபட்டுப்போய் பேச மறுத்தன கட்டங்களை நீக்கி விட்டு சொற்களையும் கோடுகளையும் இணைத்து விடலாம் என எண்ணினேன் கட்டி வைத்த சொற்களும், இணைக்க இழுத்த கோடுகளும், ஒட்ட மறுத்தன மீண்டும் கட்டங்களை வரைந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கட்டங்களும், இணைப்புக்கோடுகளும் ஒரு சேரக்காணாமல் போயின எஞ்சிய சொற்கள் என்னைக்கேலி செய்து கொண்டிருந்தன.
எதையாவது சொல்லட்டுமா........47 அழகியசிங்கர் நாங்கள் இறங்கிய இடம் ப்ளோரிடா. விஸ்தாரமான இடம். என் பையன் இருக்கும் வீட்டிலிருந்து எங்கு செல்வதாக இருந்தாலும் காரில்தான் செல்ல வேண்டும். ஒரு காய்கறி வாங்குவதற்குக்கூட காரில்தான் பயணம் போக வேண்டும். நடந்துபோக முடியாது. ஒரு பெரிய நிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பத்து அபார்ட்மெண்டுகள். வீடுகள் ஓடுகளால் வேயப்பட்டிருக்கின்றன. காரை இடது பக்கமாகத்தான் ஓட்ட முடியும். இதுவே இந்தியாவில் உல்டாவாக இருக்கும். தெருவில் கார் செல்லும் இடம் விஸ்தாரமாக இருக்கிறது. ஒரே சமயத்தில் 3 கார்கள் வரிசையாகப் போவதற்கும் வருவதற்கும் ரோடு வழிவகுத்துக் கொடுத்து இருக்கிறது. ஹைவேஸில் ஓட்டுவதாக இருந்தால் வேகமாக ஓட்ட வேண்டும். குறைந்தது 100 மைல் வேகத்தில் வண்டியை ஓட்ட வேண்டும். சிதம்பரத்திலிருந்து சென்னை வரும் தூரத்தை பையன் 2 மணி நேரத்தில் கடந்து விட்டான். அங்கு என்றால் 5 மணி நேரம் மேல் ஆகும். ஆனால் எங்கும் மனிதர்களே தென்படவில்லை. வீடுகள் கார்கள் மட்டும் கண்ணில் படும். மனிதர்கள் யாராவது உள்ளார்களா என்பது சந்தேகமாக உள்ளது. பையனுக்கு வீட்டிலேயே பண

சில்லறை

கடிகார முள் எதை துரத்துகிறது உச்சி வெயில் சாலை வெறிச்சோடியது வானில் ஒரு பட்டம் நிலவு காய்ந்தது என்னன்னமோ யோசனைகள் விடிந்துவிட்டது பைகளைத் துழாவினேன் சில்லறை இல்லை என் அதிர்ஷ்டம் வீட்டுக்குத் திரும்பினேன் கதவு பூட்டப்பட்டிருந்தது நேற்று திறந்திருந்ததே குடை விரிக்க யோசிக்கிறேன் நனைந்தால் ஒன்றும் கரைந்துவிட மாட்டேன் இன்று கடிதம் வரவில்லை என்று தான் வந்தது நாய் துரத்தியது தப்பினால் போதுமென்று ஏதோவொரு வீட்டில் நுழைந்தேன் நாய்கள் ஜாக்கிரதை என்ற போர்டை கவனிக்காமல்.

நிலாக் காவல்

நடந்து கொண்டே இருந்தேன். என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது நிலா. இரவின் தனிமை என்னை அச்சமூட்டவில்லை... நடந்த தூரங்கள் முழுக்க தொடர்ந்து உரையாடிக் கொண்டே வந்தது நிலா... நான் நுழைந்த அந்த வீட்டிற்குள் மட்டும் நுழையவில்லை அந்த நிலா.. எவ்வளவு நேரம் எனக்காக வெளியே காத்திருந்ததோ எனக்குத் தெரியவில்லை...

ஓயாத அலைகள்

நீரலை அடியில் நீந்தும் மீன்கள் எப்போது வலையில் வேடன் குறி தப்பியது கிளி அசைவின்றி மரம் ஓயாத அலைகள் நீல வானம் படகின் பயணம் நிழல் வளரும் தேயும் தண்ணீரில் முகம் தெரியும் மின்விசிறி சுழல்கிறது விளக்கு எரிகிறது படுக்கையில் யாருமில்லை சாலையில் ரோஜா சருகாகும் வரை பிணத்தின் வாடை நடைபாதையில் பணமுடிப்பு கையேந்தும் குருட்டுப் பிச்சைக்காரன் கும்மிருட்டு நகரும் நட்சத்திரம் மின்மினிப்பூச்சி காட்டுப் பாதை மேடு பள்ளம் விநோத ஒலி.

இருபது ரூபாய்..

(சிறுகதை) இந்த முறை பாபு. ஆனால் அவரை அனுப்ப மேலாளருக்கு விருப்பமில்லை. பாபு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விடுவார் என்று. பாபுவைப் பற்றி என்ன சொல்வது. 24 மணிநேரமும் பணத்தைப் பற்றியே சிந்தனை உள்ளவர். யாரிடம் எப்படி பணம் கடன் கேட்பது. பாபுவுக்கு குடும்பம் பெரிசு. 3 பெண்கள். பின் ஒரு ஆண் பிள்ளை. எல்லோரும் படிக்கிறார்கள். வருமானம் வங்கியில் கிடைக்கும் வருமானம் மட்டும்தான். வீட்டில் ஆடம்பரமான செலவு. சாட்லைட் கிளைக்கு பாபுவை அனுப்ப மேலாளர் தயங்கியபோது, மேலாளர் மீதே பாபுவுக்குக் கோபம். ஒருநாள் சாட்லைட் கிளைக்குச் சென்றால், ரூ.300 கிடைக்கும். பாபு பரக்கிற பரப்பில் முன்னதாகவே பணத்தைப் போட்டு எடுத்துக் கொண்டு விடுவான். அன்று அப்படித்தான் டிஏ பில் போடாமலேயே பணத்தை வவுச்சர் போட்டு எடுத்துக் கொண்டு விட்டான். நான் மேலாளரிடம் புகார் செய்தேன். ஏனோ அவர் பாபுவை விஜாரிக்கவில்லை. இது ஒரு பக்கம். பாபு புலம்ப ஆரம்பித்ததால், மேலாளர் சாட்லைட் கிளைக்கு பாபுவை இனிமேல் அனுப்ப ஒப்புக்கொண்டு விட்டார். பல மாதங்களாக சாட்லைட் கிளைக்கு நான் சென்று வந்ததால், சில பொறுப்புகளை பாபுவிடம் ஒப்படைக்க நானும் சென

பானகம்.

வாசலுக்குக்கோலம் போட வந்த  ஜனகா   அந்தக்காலைப்பொழுதில்  தெருவில்  கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருந்த தன் மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக  இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும்  இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு.  வேறெந்த செல்வம் இருக்கிறதோ இல்லையோ ஏழைகளுக்கு புத்திர செல்வத்திற்கு மட்டும் தடையில்லை’ என்று  அவளே அடிக்கடி அலுத்துக்கொள்வாள். "ஆம்பிளை சிங்கமா ரெண்டுபேரும்  அழகுக்கிளியா  ஒர் பொண்ணும் நமக்கு  இருக்குன்னு பெருமைப்படறதவிட்டு அலுத்துக்கிறயே  ஜனகா...” என்பான் அவள் கணவன் பத்ரி பெருமையாக. வறட்டுப்பெருமை பேசுவதும் சீட்டு ஆடுவதும் வெட்டியாக வீட்டில் அமர்ந்து மனைவியின் சமையல் வேலைவருமானத்தில் வாழ்வதும் பத்ரிக்கு திகட்டாத விஷயங்கள். ’நீ போய்ட்டுவா  ..நான் குழந்தைகளைப்  பார்த்துக்கொள்கிறேன்’  என்று வீட்டில் உட்கார்ந்துகொண்டு சகாககள் நாலைந்து  பேரோடு சீட்டுவிளையாடுவான். கல்யாணம் ஆனபுதிதில் சாயிராம் காட்ரிங் சர்வீசில்  சமையல்பணி செய்துகொண்டிருந்தான். பெரிய பிள்ளை  ஜனகாவின் வயிற்றில்  இருக்கும்போதே அங்கே மேலிடத்தில் சண்டை போட்டு வ