Skip to main content

கோடு

எறும்பின் பாதையில்
ஆள்காட்டிவிரல் தேய்க்கும் சிறுமி
சிரிப்பை மறந்து
அமர்ந்திருக்கிறாள்

வரிக்குதிரை சந்திப்புகளைக்
கடக்கும் கண்ணிழந்தவர்களை
யாரோ கைபிடித்துக் கொள்கிறார்கள்

சாக்குக்கட்டிகளை
கடந்து செல்லும்
மனிதர்களைப் பார்த்தபடி
சில்லறைக்குக் கீழே
வரையபட்டிருக்கிறான்
கைவளைந்த கடவுள்

Comments