Skip to main content

தருணம்





சில சம்பவங்கள்
நாம் விரும்பியோ விரும்பாமலோ நடக்காமலில்லை

யார் தீர்மானிக்கிறார்கள்
என்பது ஏனோ தெரிவதில்லை

அல்லது
நாமே அந்தச் சூழ்ச்சியில்
அறியாமல் மாட்டிக்கொண்டு விடுகிறோமா
என்றெல்லாம் தெரிவதில்லை

எல்லாம்
நடப்பது நடக்கட்டுமென்றுதான்
விடவேண்டியுள்ளது

நமக்கு விருப்பமான பொருள்
நம்மை அடைவதில்லை

நாம் தேர்ந்தெடுக்கும் பொருள்
நம் கைவசமாவதில்லை

நம் காலத்தை நாம் திருப்தியுடன்
கழிக்க வேண்டியதுதான்.

இதுதான் வாழ்க்கை என்று
பெரிதாக யோசனை செய்யாமலிருக்க வேண்டியதுதான்.

Comments

வாழ்க்கையின் எதார்த்தம் புரிகிறது இந்தத் தருணத்தில்
Anonymous said…
எளிமையான சொற்களில் செறிவான கருத்தை சொல்கிறீர்கள். கிட்டத்தட்ட இதே அர்த்தம் தொனிக்கக்கூடிய ஒரு கவிதை சில வாரங்கள் முன்னை எழுதினேன் (உங்களின் இந்த கவிதையை படிக்கும் முன்னர்). சுட்டியை தருகிறேன். நேரம் கிடைத்தால் படியுங்கள். நன்றி.
http://wp.me/pP1C7-5G