Skip to main content

எதையாவது சொல்லட்டுமா.........70


சமீபத்தில் நடந்த வங்கிக் கொள்ளையர்களைப் பற்றிய செய்தியைப் படித்தபோது, என் திகைப்பு அதிகமாகவே இருந்தது.  வங்கி வெகு எளிதாகக் கொள்ளை நடக்கும் இடமாக எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும்.

பீகாரிலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் வங்கி நண்பர், எப்படி இங்கே காவல் புரிபவர் இல்லாமல் ஏடிஎம் இயங்குகிறது என்று கேட்பார்.  அவர் இடத்தில் அப்படி இல்லையாம்.  சமீபத்தில் நடந்த வங்கித் தேர்வுகளில், பீகாரைச் சேர்ந்தவர்கள்தான் வங்கியில் அதிகமாக சேர்கிறார்கள்.  தமிழ் நாட்டுக்காரர்கள் மிகவும் குறைவாம்.  அதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ராம் என்கிற அந்த பீகார் நண்பர் தமிழ் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்.  எல்லா வேலைகளையும் தட்டாமல் செய்கிறார்.  அவர் கோபம் என்பது இல்லை.  அவர் மனைவியையும் ஊரிலிருந்து அழைத்துக்கொண்டு வந்து விட்டார். 

நான் பந்தநல்லூர் என்ற கிராமத்தில் பணிபுரிய செல்லும்போது, அந்த இடம் ஹோ என்று இருக்கும். கொள்ளையர்கள் எளிதில் புகுந்து கொள்ளை அடிக்கலாம்.  ஏன் என்று கேட்க ஆள் இருக்காது.  ஆனால் அங்கே எல்லாம் எதுவும் நடக்கவில்லை.  பணப் பெட்டியைப் பஸ்ஸில்தான் எடுத்துக்கொண்டு செல்வார்கள்.

நான் வங்கியில் சேர்ந்த புதியதில் தமிழ்நாட்டில் பணிபுரிபவர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்.  அதிகமாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது.  தமிழர்கள் வங்கியில் பணிபுரிவது குறைந்து விட்டது. 

பீகாரில் இருப்பவர்கள்தான் வங்கியில் பணிபுரிய வருகிறார்கள்.  இப்படி வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு சொர்க்கபூமியாக இருக்கும்.  பெரிய பயம் இருக்காது.  குற்றங்கள் நடந்தாலும் மற்ற மாநிலங்களை விட குறைவாக இருக்கும்.  குறிப்பாக பீகாரை எடுத்துக்கொண்டால், பீகாரை விட தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும்.  அதனல்தான் ராம் இங்குள்ள வங்கிக் கட்டிடங்களைப் பாதுகாக்க ஏன் கவலாளிகள் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறான்.

ஆழைப்புழை என்ற அற்புதமான இடத்திலிருநந்து கேரள பெண்மணி ஒருவர் குமாஸ்தாவாகப் பணிபுரிய    சீர்காழி வருகிறாள்.  ஊரில் இருக்கும் அம்மாவை நினைத்து எப்பாவாவது அழுவாள். ஆனால் தைரியமான பெண்.  வேறு மொழி பேசும் தமிழ்நாட்டில் தைரியமாக இருக்க முடிகிறது.
பீகாரிலிருந்து வந்தவர்கள்தான் சிலர் கொள்ளையர்களாக மாறி கொள்ளை அடிக்கிறார்கள். சிலர் படிக்க வருகிறார்கள்.  சிலர் வங்கியில் பணி புரிய வருகிறார்கள். 

Comments