Skip to main content

கூப்பாடு



என்னைச் சொல்லி 
ஆவது ஒன்றும் இல்லை-
நானாக உன்னைக் கூப்பிட வில்லை
நீயாக வந்தாய்
எட்டிப் பார்த்தாய் 
பிரதி பிம்பம் கண்டாய் 
பின் சென்று 
காணவில்லை என்று 
கூப்பாடு போடுகிறாய் 
அடம் பிடிக்கும் சண்டிச் சிறுமியாய்!
உன் பிம்பம் காட்டுதல் 
நான் வேண்டி விரும்பிச் செய்யவில்லை
அதுபோலவே 
காட்டக்கூடாது என்றும்
நான் ஆசைப் பட்டுச் செய்யவில்லை

உன்வீட்டுக் கண்ணாடியில்
ரசம் பூசியது
நீயா 
நானா

இதைச் சொல்ல
பிளாடோவும்
சாக்ரடீசும்
தேவையா-
கொஞ்சமே யோசித்தாலும்
விளங்கும் -

உண்மையில்..
எனக்கு 
பிம்பம் என்ற ஒன்றோ
அது தெரிவது
என்பதோ  
நான் அறியாத ஒன்று
எனக்குத் தெரியாதது 

நீயாக 
ஏதோ செய்கிறாய்
பின்னர் 
கூப்பாடு போட்டு 
ஊரைக் கூட்டுகிறாய்
மெழுகு வத்தி ஏற்றி 
கோஷம் போட்டு
நியாயம் வேண்டும் என்கிறாய்

Comments