Skip to main content

ழ கவிதைகள்






ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது.  அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு.  மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள்.  1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும்.

அழகியசிங்கர்

ழ 6வது இதழ்

பிப்ரவரி / மே 1979

ஒரு கவிதை

 இந்தக் காலத்தில்
 பிரும்மத்தை
 கள்ளச் சந்தையில்
 வீடீயில்
 மந்திரிகளின் பொய்களில்
 எதிலும் (மே) குறைபிரசவத்தில்,
  அவசரத்தில்
 தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்
      -தான்
 காணமுடியும் போலிருக்கிறது.
   -மீண்டும்-
 இந்தக் காலங்களில்
 தெய்வத்திற்கும் (கூட) ஊர்
 சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது
 என நினைத்தேன்-
 சினிமாவெறும் கோவிலில்
 நேற்று இரவு அவள் வந்தாள்
 சிரித்தாள்
 சொல்லறுற்றாள்
 ''எப்போதுமே அவன்ஊர்களிலிருந்ததில்லை''

      s. சம்பத்

Comments