Skip to main content
தோற்பாவைக்கூத்து

சின்னப்பயல்


 
புதிதாக வெள்ளையடித்த சுவரில்

நகத்தை
வைத்துக்கீறும்போது ஏற்படும்

மனக்குறுகுறுப்பை
உள்ளூர ரசிப்பது,

மண்ணெண்ணெய்
பாட்டிலைத் திறந்து

அதன்
மணத்தை தான் மட்டும் நுகர்வது,

ஆகக்கூடுதல்
சிரமத்திற்குப்பின்னர்

கைவிரல்களால்
பிடித்த வண்ணத்துப்பூச்சியின்

நிறத்தை
உற்றுநோக்குவது,

இப்போது
அடிக்கப்போகும் பெரிய அலை

கண்டிப்பாகத் தன் காலை நனைத்தே தீரும்

என நினைக்கையில்

அது
அருகில் கூட வராமல் போவதை ரசிப்பது,

தரைமட்டமான
கட்டிட இடுபாடுகளிலிருந்து

சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் மீண்டுவருவது,

சிறு
கண்ணாடிக்குடுவையின்

உள்ளுக்குள்
நீந்தும் மீனை வெளியிலிருந்து

ஏதும் செய்ய இயலாது பார்க்கும்

பூனை
மனத்துடன் சில சமயங்களில் இருப்பது,

எனக்கென்னவோ

இவையெல்லாவற்றிற்கும்


காதலுக்கும்
தொடர்பிருக்கிறது

என்பது போலத்தான் தோணுகிறது.

-

Comments

ஆகா... சிறு வயதில் இவையெல்லாம் செய்ததாயிற்றே...

அழகாக ஒப்பிட்டு நன்றாகவே முடித்துள்ளீர்கள்...