Skip to main content

Posts

Showing posts from September, 2014

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஐந்தாவது கூட்டம்

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஐந்தாவது கூட்டம், மூத்தக் கவிஞர் எஸ் வைதீஸ்வரனை வைத்து இந்த மாதம் 20ஆம் தேதி சிறப்பாக நடந்தது. எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வருபவர் எஸ் வைதீஸ்வரன்.  தொடர்ந்து இன்னும் கவிதை எழுதி வருகிறார்.  அவர் கொஞ்சம் கவிதை...கொஞ்சம் வாழ்க்கை என்ற தலைப்பில் உரை நிகழ்ந்தினார்.   கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் தன் அனுபவங்களை  அவை எப்படி கவிதைகளாக மலர்ந்தன என்பதைக் குறித்து கவிதைகளுடன் உரை நிகழ்த்தினார். எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதினாலும், எழுத்து என்ற பத்திரிகைப் பற்றி தெரியாமலும் கவிதையில் ஏற்பட்ட புதிய மாற்றம் பற்றியும் தெரியாமலும் கவிதை எழுதியதாக குறிப்பிட்டார்.  அவர் முதன் முதலாக எழுதிய கவிதையை அவருடைய உறவினரும், குருநாதருமான ராம நரசுவிடம் காட்ட, இதுமாதிரியான கவிதைகள் எல்லாம் திருவல்லிக்கேணியிலிருந்து எழுத்து என்ற பத்திரிகையை சி சு செல்லப்பா என்பவர் கொண்டு வருகிறார்.  அவர்தான் இதையெல்லாம் பிரசுரம் செய்வார் என்றாராம்.  அதேபோல் எழுத்து பத்திரிகையில் அனுப்பிய அந்தக் கவிதை அப்படியே பிரசுரம் ஆனதாம்.  எழுத்து காலத்திலிருந்து கவிதை எழு

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

அழகியசிங்கர் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான கதைகளில் என் மனதுக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுக்க நினைத்தேன்.  அவற்றில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் தோன்றியது.  கதைகளைப் படிக்க நான் தேர்ந்தெடுத்தப் பத்திரிகைகளின் விபரத்தையும் இங்கே கொடுக்க விரும்புகிறேன். 1. தினமணி கதிர் 2. தினமலரின் வாரமலர் 3. கல்கி 4. அமுதசுரபி 5. ஆனந்தவிகடன் 6. கணையாழி 7. தீராநதி 8. உயர்மை 9. காலச்சுவடு 10. உயிர் எழுத்து 11. அந்தி மழை 12. அமிருதா என் கண்ணில் பட்ட சிறுகதைகளை வெளியிடும் பத்திரிகைகள்தாம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்திரிகைகள்.  முதலில் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதைகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.   ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கதை விதம் ஒரு மாதத்தில் வரும் ஐந்து வாரங்களில் ஐந்து கதைகளைப் படித்தேன்.  நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை வரிசை என்ற பெயரில் சில இதழ்களில் ஒரு சிறுகதை வெளியிடுகிறார்கள்.  ஆனால் ஒரு இதழில் ஒரு கதைக்கு மேல் வெளியிடுவதில்லை.  முதலில் இக்கதைகளைப் படிக்க அலாதியான பொறுமை அவசியம்.  திறந்த மனத்துடன் கதைகளைப் படிக்க உட்கார வேண்டும்.  இன்றைய காலக்

மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான்

கசடதபற டிசம்பர் 1970 - 3வது இதழ் ஞானக்கூத்தன் எழுந்ததும் கனைத்தார்; மெல்ல சொற்பொழிவாற்றலானார்- வழுக்கையைச் சொறிந்தவாறு 'வாழ்கநீ எம்மான்' என்றார்; மேசையின் விரிப்பைச் சுண்டி 'வையத்து நாட்டில்' என்றார் வேட்டியை இறுக்கிக் கொண்டு 'விடுதலை தவறி' என்றார் பெண்களை நோட்டம் விட்டு 'பாழ்பட்டு நின்ற' என்றார் புறப்பட்டு நான் போகச்சே 'பாரத தேசம்' என்றார்; 'வாழ்விக்க வந்த' என்னும் எஞ்சிய பாட்டை தூக்கி ஜன்னலின் வழியாய்ப் போட்டார் தெருவிலே பொறுக்கிக் கொள்ள,

முட்டையினுள்.....

நவம்பர் 1970   -  கசடதபற இரண்டாவது இதழ் குந்தர் கிராஸ் நாம் முட்டையினுள் வசிக்கிறோம் ஓட்டின் உட்புறச் சுவரில் ஒழுங்கற்ற சித்திரங்கள் நமது விரோதிகளின் முதற் பெயர்கள் தீட்டி விட்டோம் நாம் அடைக்காக்கப் போகிறோம் நம்மை அடைக்காக்கிற யாரோ நமது பென்சில்களையும் அடைகாக்கிறார்கள் முட்டையிலிருந்து விடுபடும் ஒருநாள் நம்மை அடைகாக்கிறவர் படத்தை நாம் உடனே வரைவோம். நாம் அடைக்காக்கப் பெறுகிறோம் என்று நாம் எண்ணிக் கொள்கிறோம். நல்ல சுபாவமுள்ள கோழி ஒன்றை கற்பித்துக் கொள்கிறோம். நம்மை அடைகாக்கும் கோழியின் வர்ணம், வம்சம் பற்றி பள்ளிக்கூட கட்டுரைகள் எழுதுகிறோம். நாம் ஓட்டை உடைப்பது எப்போது? முட்டை உள்ளிருக்கும் மகான்கள் அடைகாக்கும் நாள் குறித்து அற்ப சம்பளத்திற்கு விவாதிக்கிறார்கள். நாம் விடுபடும் நாளை அவர்கள் üகý எனக் குறிக்கிறார்கள் நிஜமான தேவை, சலிப்பின் பொருட்டு நாம் அடைகாப்பவனை கற்பிக்கிறோம். முட்டையுள் நமது சந்ததி குறித்து நாம் கவலை கொள்கிறோம் நம்மை கவனிக்கும் அவளுக்கு நமது முத்திரையை மகிழ்வுடன் சிபாரிசு செய்கிறோம். ஆனால் நம் தலைக்குமேல் கூரை உண்டு. மூப்படை

மூன்று கவிதைகள்

நவம்பர் 1970   -  கசடதபற இரண்டாவது இதழ் நகுலன் வட்டம் 1 வாழ மனமில்லை சாக இடமில்லை வானில் மேகமில்லை ஆனால் வெயிலும் மடிக்கவில்லை கந்தைக் குடைத் துணியெனக் கிடக்கும் தன்னினமொன்றைச் சுற்றிச் சுற்றி வருமிக் கறுப்பின் ஓலம் போல் செத்துக் கிடக்கும் சுசீலாவை வட்டமிட்டு வட்டமிட்டு வட்டமிட்டு..... வட்டம் 2 பேனாவுக்கு மையிட்டு அதன் முனைதீட்டி வெள்ளைக் காகிதத்தை மேசை மீது விரித்து எழுத வருங் கால் பேனாவின் முனை மூளையின் மண்டைக் கனத்தில் குடை சாயும் வெள்ளைக் காகிதத்தின் வைரத் திண்மையில் அதன் கூர் மழுங்கும்; சேலை அவிழ்க் கலாமென்றா லோ சுசீலாவும் செத்துக் கிடக்கிறாள் வட்டம்  3 என் எழுத்து நேற்றில்லை இன்றில்லை நாளையில்லை ஏதோ நாவல் ஏதோ கவதை என்றெழுதிய வையும் குப்பைக் கூடையின் ஏக வாரிசு; என்றாலும் என்ன? சுசீலாவே செத்துவிட்டாள் என் எழுத்து மறைந்தபின் நான் இருந்தென்ன இல்லாமல் போனால் தான்                            என்ன?

இரு கவிதைகள்

நவம்பர் 1970   -  கசடதபற இரண்டாவது இதழ் அம்மைபாலன் 1. கர்ப்பம் தேவர்களுக்குத் திருஷ்டி கர்ப்பம் உண்டாம். நல்ல வேளை நாமோ - மூன்றின் விலை பதினைந்தே காசுகள் 2. சந்தா புரிகிறது ஓராண்டும் அரையாண்டும் கூட. ஆயுள் சந்தா மட்டும் புரியவில்லை ஆயுள் - எனக்கா? அதுக்கா?

ஒரு பாடம்

நவம்பர் 1970   -  கசடதபற இரண்டாவது இதழ் தி.சோ.வேணுகோபாலன் "போடா நாயே" வார்த்தை 'வெள்' என்று வெடித்தது இதயம் படபடக்க கண்கள் சிவந்தன. அறிவில் குறுகுறுக்கிறது ஒரு படம் தொழுநோய்ப் பிச்சைக்காரனை தன் வால் தூரிகையால் நாய் மனிதனாய்ச் சித்தரித்தது

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் நான்காவது கூட்டம்

அழகியசிங்கர்        விருட்சம் இலக்கியச் சந்திப்பின் நான்காவது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி நடந்தது.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரை கூப்பிட்டுப் பேசச் சொல்வது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம்.  இப்படிப் பேசச் சொல்லும்போது எத்தனைப் பேர்கள் வருவார்கள் அல்லது வராமல் போவார்கள் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை முக்கியமில்லை.  ஆனால் பேச வருபவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்பது தெரியில்லை.     இந்த முறை காந்தியிடம் காரியதரசியாக பணியாற்றிய ஸ்ரீ கல்யாணம் அவர்களை பேசக் கூப்பிட்டோம்.  அவருக்கு வயது 93.  காந்தியுடன் உயிரோடு இருந்தவர்கள் 3 பேர்தான் உலகம் முழுவதும்.  அந்த மூன்று பேர்களில் கல்யாணமும் ஒருவர்.  கல்யாணம் ஒரு எளிமையான வாழ்க்கையை எந்தவித ஆடம்பரமுமின்றி வாழ்ந்து வருகிறார்.  தனியாக 93 வயது மனிதர் இருந்து வருகிறார்.  அவருக்கு செடிகொடிகள் மீது அலாதியான பிரியம்.  காலையில் மூணு நாலு மணி நேரம் அதற்காகவே செலவிடுகிறார்.  அவர் சாப்பாட்டு தேவை மிக மிகக் குறைவு.      இன்றைய அரசியல் குறித்த அதிருப்தியை அவர் காந்தியைப் பற்றி பேசும்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.  வெள்ளைக்கார

குருவும் சிஷ்யனும்

நவம்பர் 1970   -  கசடதபற இரண்டாவது இதழ் க. நா. சுப்ரமண்யம் கை நீட்டித் தலையில் வைத்து உபதேசம் செய்து முடித்த குருவை வணங்கி நஇடத்தமர்ந்த சிஷ்யனை 'விளங்கிற்றா?' என்று குரு வினவ'விளங்கிற்று' என்று சிஷ்யன்கூற 'என்ன விளங்கிற்று எனக்கும் சொல் ' என்று சகபாடி கேட்டான் 'குருவே சொல்வார்' என்று பதில் வந்தது.