Skip to main content

கசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்



ஹரி : ஓம் : தத் : ஸத்
           
                                                                                                 ஐராவதம்



நெடுஞ்சாலை நடுவினிலே
நான்
நீண்ட நேரம் படுத்திருக்க
நினைத்ததுண்டு

பச்சை விளக்கு எரிகையிலே
பாய்ந்து வரும் கார்கள்
பஸ்கள்,  லாரிகள், டாக்ஸிகள்
ஸ்கூட்டர்கள், சைகிள்கள்
அத்தனையும் என் பொருட்டு
நின்றுவிடும் எனக் கற்பனை
செய்ததுண்டு.

கடற்கரைக் கூட்டத்தில் கல்லெறிய
துடித்ததுண்டு
ஒளிச்சர விளக்குகள்
ஒலித்துச் சிதற
பலி ஆடு மந்தையென
பார்த்திருப்போர் கூட்டம்
ம்மே ம்மே என அலறிச் சிதற
மேடையில் நிற்பவர் மணலுக்குத் தாவ
களேபரச் சந்தடியில்
காற்றாய் மறைய நினைத்ததுண்டு

பாட்டுக் கச்சேரியில்
பட்டுப் புடவைகள் வைரத்தோடுகள்
நவரத்தினக் கழுத்தணிகள்
நாற்புறமும் சிதற
கீர்த்தனை கிறீச்சிட
முத்தாய்பபு விழிதெறிக்க
சங்கதிகள் அந்தரத்தில்
சதிராட
வெடிகுண்டு வீசிடவும்
என் கைகள் துடித்ததுண்டு.

நகரத்தின் தெருக்களில்
நான் இன்னமும் நடக்கிறேன்.....
நடக்கிறேன்.....நடக்கிறேன்.....


ஐராவதத்தின் இந்தக் கவிதை விபரீதத்தை விளக்கும் கவிதை.  நெடுங்சாலையில் யாராவது படுத்திருக்க வேண்டுமென்று நினைப்பதுண்டா? படிப்பவரை அதிர்ச்சி அளிக்கும்.  ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இதெல்லாம் அதிர்ச்சி இல்லை.  மனப்பிறழ்வை உண்டாக்கும் ஒன்றாக நினைக்கலாம்.

கடற்கரையில் கூட்டம் நடக்கிறது.  ஏன் கல்லெறிய வேண்டும்.  அதனால் ஏற்படும் பின் விளைவுகளை எள்ளல் தன்மையுடன் வெளிப்படுத்துகிறார்.  பாட்டுக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ஏன் வெடிகுண்டு வீச நினைக்கிறார்.  

புரியவில்லை.

Comments