Skip to main content

வெள்ளம் பற்றிய ஐந்து கவிதைகள்

அழகியசிங்கர்


கவிதை 2



ராமன் வீடு தனியாக இருக்கும்
கீழே மேலே என்று
பள்ளத்தில் இருக்கும்
எப்பவோ கட்டிய வீடு
சாதாரண மழைக்கே வந்து விடும்
உள்ளே மழை நீர்
இது பெரும் மழை
தெருவில் உள்ள சாக்கடை
நீரெல்லாம் உள்ளே வந்து
ராமன் அதிர்ச்சி அடைந்து
தன் வீட்டு மாடியில் குடியிருக்கும்
வீட்டில் தஞ்சம் அடைந்தார் மனைவியுடன்
மறு நாள் மாடியில் இருந்து
தெருவைப் பார்த்தார் கவலையுடன்
அவர் முகமே சரியில்லை
அடுத்தநாளுக்கு அடுத்தநாள்
தெருவில் நடந்தபோது
என்ன ஆயிற்று என்று கேட்டேன்
சீலிங் பேன் வரை சாக்கடை நீர்
நாற்றம்
வீட்டுப் பத்திரம் எல்லாம் போய்விட்டது
இன்னும் என்னன்ன துயரமெல்லாம்
சுமக்கப் போகிறேனோ என்று
உடைந்த குரலில் கூறி
மேலும் பேசப்பிடிக்காமல்
நகர்ந்து விட்டார்

Comments