Skip to main content

கசடதபற இதழ்

மூன்று கவிதைகள்

நகுலன்



1.

நாலும் நடந்தபின்
நானாவிதமாக என் மனம்
போன பின்
நானொரு மரமானேன்

2.
நின்றநிலை தவறாமல்
சென்றவிடம் சிதறாமல்

ஈன்ற தாயினும்
இறந்து மறைந்த
தந்தையினும்
சாலச் சிறந்தது
ஒன்றுன்றுன்றுன்று
இன்று வரை

காலஞ் செல்லச் செல்லச் செல்லக்
கோலங்கள் கலையும்
கைவல்ய ஞானம் கிட்டும்
இன்று வரை

3.
நானொரு பேயானேன்
ஆனபின்
ஏனோ நான்
சூடாகப் பிணந்தின்னச்
சுடுகாட்டைச் சுற்றுகின்றேன்
ஒரு குரல் கூறும்
"ஆசை, மச்சான்
ஆசை"


ஏதோ தாள் கண்ணில் பட்டது.  பார்த்தால் கசடதபற என்ற இதழின் ஒரு பக்கம்.  பெரிய அளவில் வந்த கசடதபற மாறினபிறகு சின்ன அளவில் கசடதபற சில மாதங்கள் வெளிவந்தன. அதன் ஒரு பக்கம் மட்டும் கண்ணில் பட்டது.  அட்டைப் படம் நன்றாக இருந்தது.  உள்ளே வித்தியாசமான நகுலன் கவிதை.  இரண்டையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

Comments