Skip to main content

Posts

Showing posts from October, 2016
நீங்களும் படிக்கலாம்....23 அழகியசிங்கர்    கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி? எம் டி முத்துக்குமாரசாமி எழுதியுள்ள 'நிலவொளி எனும் இரசசிய துணை என்ற கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்' என்ற புத்தகத்தைப் படித்தேன்.  முன்னுரையில் 'இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என இலக்கியப் பிரதி பற்றி எனக்கொரு கருத்து உண்டு' என்று  குறிப்பிடுகிறார் எம் டி எம்.   இதை கடந்த முப்பது வருட இலக்கியக் கோட்பாட்டு வாசிப்புகளிலிருந்து அவர் அணுக்கமாகப்  பெற்ற பார்வையாகும் என்கிறார்.  இதைச் சாதாரண வாசகனே அவன் படிப்பனுவத்திலிருந்து உணர முடியாதா? இத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றில் சுப்பிரமணிய பாரதியார் மகா கவியே என்பதை நிரூபிக்கிறார் எம் டி எம்.  இக் கருத்தை ஜெயமோகனுக்கு பதிலாக தெரிவிக்கிறார்.   அப்படி சொல்லும்போது பாரதியார் கவிதைகளில் பிரஞ்ஞையின் கரை உடையும் தருணங்கள் வாசக அனுபவமாக எளிதில் வசப்படுகின்றன என்கிறார். பாரதியார் குறித்து அவர் கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.     மொழியியல், இலக்கிய

தீபாவளியும் எங்கள் தெருவும்...

அழகியசிங்கர் எங்கள் தெரு ஒரு சாதாரண தெரு.  முன்பு ரொம்பவும் மோசமாக இருந்தது.  இரண்டு பக்கமும் சாக்கடைகள் ஓடிக்கொண்டிருந்தன.  சாரி..தேங்கிக்கொண்டிருந்தன.  ஆனால் இப்போது இல்லை.   தெருவில் ஏகப்பட்ட குடியிருப்புகள்.  நிறையா சின்ன சின்ன பசங்கள். வாலிபர்களும் உண்டு.  தீபாவளி அன்று எங்கள் தெருவிற்கு தயவுசெய்து வந்து விடாதீர்கள்.  நாங்கள் வேறு வழி இல்லாமல் இருக்கிறோம்.  காலையில் ஆரம்பிக்கும் பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துவிடும்.  எல்லோரும் சாதாரண வெடிகளை வெடிப்பதில்லை.  அணுகுண்டைதான் ஒவ்வொருவரும் வெடிக்கிறார்கள்.  அல்லது சரம் வெடிகளை சரம் சரமாக வெடிக்கிறார்கள்.  எங்கள் தெருவில் என்ன விசேஷம் என்றால் தீபாவளி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னே ஆரம்பித்துவிடும்.  பின் தீபாவளி முடிந்தபின்ன்னும் இன்னும் சில நாட்கள் ஓடும்.   சுற்றிச் சுற்றி இந்த பொடியன்கள் பாடாய் படுத்துவார்கள்.  நான் தீபாவளி அன்று காலையில் எழுந்து விட்டேன்.  என் வீட்டில் போன ஆண்டு நான் வாங்கிய கம்பி மத்தாப்பைத் தவிர  வேற எதுவும் இல்லை.  போன ஆண்டே நான் வாஙகியிருந்த கம்பி மத்தப்பை கொளுத்தவில்லை.  நேற்றோ தொடக் கூ

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 9

அழகியசிங்கர் https://youtu.be/9xbfhM4NjS8 வழக்கம்போல  ஒன்பதாவது கூட்டம் இது.  வெளி ரங்கராஜன் அவர்களைப் பேட்டி கண்டுள்ளேன்.  முன்பெல்லாம் நானும் வெளி ரங்கராஜனும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளாமல் இருக்க மாட்டோம்.  எதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம்.  இப்போது முன்பு போல் முடிவதில்லை.     பத்து கேள்விகள் பத்து பதில்கள் சார்பாக அவரைப் பேட்டி கண்டுள்ளோம். இதைப் பார்த்து ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  என் முயற்சிக்கு முழு ஆதரவு தருபவர் கிருபானந்தன்.  இதில் எதாவது குறைகள் தென்பட்டால் தெரிவிக்கவும்.  திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறோம்.  சோனி காமெராவின் டிஜிட்டல் பயன்பாடை இவ்வளவு தாமதமாகத்தான் கண்டு பிடித்தேன்.  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 32

அழகியசிங்கர்   கண்ணன் - என் காதலன்    சி சுப்பிரமணிய பாரதி  ஆசை முகமறந்து போச்சே - இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில் நினைவு முகமறக்க லாமோ? கண்ணில் தெரியுதொரு தேற்றம் - அதில் கண்ண னழகுமுழு தில்லை நண்ணு முகவடிவு காணில் - அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம். ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன் உறவை நினைத்திருக்க முள்ளம் வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த மாயன் புகழினையெப் போதும் கண்கள் புரிந்துவிட்ட பாலம் - உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு. பெண்க ளினத்தி லிதுபோலே - ஒரு பேதையை முன்புகண்ட துண்டோ? தேனை மறந்திருக்க வண்டும் - ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த வைய முழுதுமில்லை தோழி. கண்ணன் முகமறந்து போனால் - இந்தக் கண்க ளிருந்துபய னுண்டோ? வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி வாழும் வழியென்னடி தோழி? நன்றி : பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு - தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் - விலை ரூ.80 - தமிழ்நாட்டரசின் பாரதி நூற்றாண்டு விழாத் திட்ட உதவியில் வெளியாகும் புதிய பதிப்பு - இரண்டாம் பதிப்பு : 1989         

கூட்டத்திற்கு வராதவர்கள் பார்த்து ரசிக்கவும்

அழகியசிங்கர் 100வது கூட்டத்திற்கு வர முடியாதவர்கள், கூட்த்தில் பேசியதை ஷ்ருதி டிவி படம் பிடித்துள்ளது.  அதை உங்களுக்கு திரும்பவும் தருகிறேன்.     பார்க்கவும்.  பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும். 1 https://www.youtube.com/watch? v=nIVgsEq5Mco 2 https://www.youtube.com/watch? v=SIOsB4KyjYc 3 https://www.youtube.com/watch? v=-EnhLV_uvEI 4 https://www.youtube.com/watch? v=1hLqsQdDX5Q

100வது இதழ் நவீன விருட்சம் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நன்றி...

அழகியசிங்கர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு என் நன்றி.  கிட்டத்தட்ட பேச வந்தவர்கள் எல்லோரும் வந்திருந்து சிறப்பாகப் பேசினார்கள். நன்றி. ஹால் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.  இக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்கள் டாக்டர் பாஸ்கரன், கிருபானந்தன், சுந்தர்ராஜன். இம் மூவருக்கும் என் தனிப்பட்ட நன்றி.  நன்றி  நன்றி   நன்றி. என் நெருங்கிய நண்பர்களை அழைத்து ஒரு சிலரைப் பேசவும் கேட்டுக்கொண்டேன்.   அவர்கள் பேசும்போது சில தகவல் பிழை இருப்பதாகப் பட்டது.   அதைப் பொருட்படுத்தவில்லை. புகைப்படங்கள் வரவிற்காக காத்திருந்தேன்.  புகைப்படங்களை க்ளிக் ரவி கொடுத்துள்ளார்.  ஒன்று மட்டும் இத்துடன் இணைக்கிறேன்.

சில துளிகள்.......3

அழகியசிங்கர்  - இன்றைய தமிழ் ஹிந்துவில் நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து குறிப்பு வந்துள்ளது.   தமிழ் ஹிந்துவிற்கு நன்றி.   - நவீன விருட்சம் பத்திரிகையோனடு சேர்ந்து நான் இலக்கியக் கூட்டமும் நடத்தியிருக்கிறேன்.  ஆனால் எவ்வளவு கூட்டம் என்று எண்ணவில்லை. 200 இருக்கும்.  100 கார்டு வாங்கி எல்லோருக்கும் கூட்டம் பற்றி விபரம் சொல்வேன்.  திருவல்லிக்கேணி லேடீஸ் ஹாஸ்டல் மாடியில்தான் கூட்டம் நடக்கும்.  பார்த்தசாரதி கோயில் பக்கத்தில். வழக்கம்போல் கொஞ்சம் பேர்கள்தான் வருவார்கள்.  பெண்கள் வர மாட்டார்கள்.  வருபவர்கள் தலை வழுக்கையாக இருப்பார்கள். - கடந்த நாலைந்து மாதங்களாக அப்பா படுத்துப்படுக்கையாக இருக்கிறார்.  சில நாட்கள் நல்ல நினைவோடு இருக்கிறார்.  நான் அவரைப் பார்த்துக் கேட்டேன் : "நான் யார்?" என்று.  அவருக்கு இந்த 94 வயதிலும் கிண்டல் உண்டு.  "நீ என் அப்பா" என்றார் கையைக் காட்டியபடி.  அவர் சொன்னதைக் கேட்டு சிரிப்பாக இருந்தது.  என் மனûவிதான் குறிப்பிட்ட வேளைக்கு சாப்பாடு தருகிறார்.   நான்தான் ஊட்டி விடுவேன்.  ஆனால் அப்பா என்னைப் பார்த்துக்  கேட்பார்:

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 31

அழகியசிங்கர்  ஏனென்றால்....                     ஜெ. பிரான்சிஸ் கிருபா நீரென்று தெரியும் மீனுக்கு மீனென்று தெரியாது நீருக்கு ஏனென்று கேட்கிறாய் என்னிடம் குரலென்று தெரியும் குயிலுக்கு குயிலென்று தெரியாது குரலுக்கு ஏனென்று கேட்கிறாய் என்னிடம் புயலென்று தெரியும் கடலுக்கு கடலென்று தெரியாது புயலுக்கு ஏனென்று கேட்கிறாய் என்னிடம் உயிரென்று தெரியும் உடலுக்கு உடலென்று தெரியாது உயிருக்கு ஏனென்று கேட்கிறாய் என்னிடம் கதிரென்று தெரியும் பகலுக்கு பகலென்று தெரியாது கதிருக்கு ஏனென்று கேட்கிறாய் என்னிடம் நிலவென்று தெரியும் இரவுக்கு இரவென்று தெரியாது நிலவுக்கு ஏனென்று கேட்கிறாய் என்னிடம் நீயென்று தெரியும் எனக்கு நானென்று தெரியாது உனக்கு ஏனென்று கேட்காதே என்னிடம்! நன்றி : சம்மனசுக்காடு - கவிதைகள் - ஜெ பிரான்சிஸ் கிருபா - பக்கம் : 111 - விலை ரூ.95 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 - தொலைபேசி : 044 - 24896979 

நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து இன்னும் சில தகவல்கள்

நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து இன்னும் சில தகவல்கள் அழகியசிங்கர்  நவீன விருட்சம் 100வது இதழுக்கான கூட்டம் ஒன்றை மேற்கு மாம்பலத்தில் உள்ள மகாதேவன் தெருவில் உள்ள காமாட்சி ஹாலில் ஏற்பாடு செய்து உள்ளேன்.  வரும் ஞாயிற்றுக்கிழமை 23.10.2016 அன்று மாலை 6 மணிக்கு.  இது குறித்து விபரங்கள் இன்னும் சில தினங்களில் அளிக்கிறேன். நவீன விருட்சம் 100ல் பங்குகொண்ட படைப்பாளிகளைப் பற்றியும் படைப்புகளைப் பற்றியும் கூடிய விபரத்ததை இங்கு தருகிறேன். 1. பெருந்தேவி கவிதைகள் 2. கா ந கல்யாணசுந்தரம் - என் கிராமத்து சுமைதாங்கி கல் 3. வேல் கண்ணன் கவிதைகள் 4. மறதியின் பயன்கள் - ஞானக்கூத்தன் 5. தூரம் - சிறுகதை - ஜெயந்தி சங்கர் 6. பொன் தனசேகரன் கவிதைகள் 7. நடப்பியல் - நீல பத்மநாபன் 8. அம்ஷன் குமார் கட்டுரை 9. அகலிகைப் படலம் - போயோன் 10. தமிழவன் சிறுகதைத் தொகுதியைப் பற்றி விமர்சனம் 11. லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்  12. ரோஸ் ஆன்றா கவிதைகள் 13. தமிழவன் சிறுகதை - காந்தி லிபி 14. ராமலக்ஷ்மி கவிதைகள் 15. எஸ் சுதந்திரவல்லி கவிதைகள் 16. தொடாத பூ - ந

விருட்சம் 100வது இதழ் வந்து விட்டது

அழகியசிங்கர் விருட்சம் இதழின் 100வது இதழ் வந்துவிட்டது.  நேற்று மதியம் வந்தது. கிட்டத்தட்ட 100வது இதழ் முடியும்போது 25 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும்.  28 ஆண்டுகள் ஓடி விட்டன.  99வது இதழ் விருட்சம் பிப்ரவரி 2016ல் வந்தது.  அதன்பின் 8 மாதங்கள் தட்டுத் தடுமாறி 100வது இதழை இதோ அக்டோபர் மாதம் கொண்டு வந்து விட்டேன்.100வது இதழ் 100வது இதழ் என்றதால் பக்கங்களும் அதிகமாய் விட்டன. 260 பக்கங்கள்.  இதுவரை நான் விருட்சம் இவ்வளவு பக்கங்கள் கொண்டு வரவில்லை. இந்த இதழ் தயாரிக்க செலவும் அதிகம். ஆனால் நண்பர்கள் உதவியதால் கொண்டு வர முடிந்தது.  ஒரு இதழிலிருந்து இன்னொரு இதழ் கொண்டு வருவதற்குள் என் நிலையில் பெரிய மாறுதல் இருந்துகொண்டே இருக்கும்.   இந்த இதழில் பலர் எழுதியிருக்கிறார்கள்.  அத்தனை எழுத்தாள நண்பர்களைப் பற்றிய குறிப்புகளையும் நான் தயாரித்து இங்கு தெரியப்படுத்துகிறேன்.  எழுதிய அத்தனைப் படைப்பாளிகளுகளுக்கும் என் நன்றி உரித்தாகுக.  அதேபோல் இதழ் நான் கொண்டு வரும் வரைக்கும் என்னுடன் போராடி வெற்றிபெறச் செய்த நண்பர்கள் : கிருபானந்தன், டாக்டர் பாஸ்கரன், சுந்தர்ராஜன் முதலிய நண்பர்களுக்கு

ஐராவதமும் புத்தக விமர்சனமும்...

ஐராவதமும் புத்தக விமர்சனமும்...             அழகியசிங்கர் என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார்.  ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும்.  அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம்.  ஒவ்வொரு விருட்சம் இதழிலிலும் எதாவது ஐராவதம் எழுதிக் கொடுப்பார்.  ஒரு முறை சிறுகதை எழுதித் தருவார்.  ஒருமுறை கவிதை எழுதித் தருவார்.  ஒருமுறை கட்டுரை எழுதித் தருவார்.  விருட்சத்திற்கு புத்தகங்கள் எல்லாம் விமர்சனத்திற்கு வரும். அந்தப் புத்தகங்களை உடனே படித்து விட்டு எழுத வேண்டும்.  என்னால் அப்படி படிக்க முடியாது.  ஒருமுறை ஐராவதத்தைப் பார்த்து, üüபுத்தகங்கள் வந்திருக்கின்றன.  விமர்சனம் செய்ய வேண்டும்,ýý என்றேன்.  üüஎன்னிடம் கொடுங்கள்.  விமர்சனம் செய்து தருகிறேன், என்றார்.   நாங்கள் இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்வோம்.   மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்வோம்.  விமர்சனத்திற்கு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் ஐராவதத்திடம் கொடுத்து விடுவேன். ஐராவதத்திடம் புத்தகங்கள் கொடுப்பதில் எனக்கு ஒரு நன்மை உண்டு. அவர் விம

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 30

அ ழகியசிங்கர்   சிட்டுக்குருவிப் பாட்டு பாரதிதாசன்  சிட்டுக்குருவிச் சிறுபெண்ணே, சித்தம் போலச் செல்பவளே, கொட்டிக் கிடக்கும் தானியமும் கொல்லைப் புழுவும் திண்பவளே, எட்டிப் பறந்தாய் மண்முழுதும் ஏறிப் பறந்தாய் வானமெல்லாம் இஷ்டப் படிநீ செய்கையிலே ஏன்? என்பாரைச் üசீý என்பாய். உன்னைக் கேட்பேன் ஒருசேதி. உரிமைத் தெய்வத்தின் மகளே, தின்னத் தீனி தந்திடுவேன். தெரிவிக்காமல் ஓடாதே! மன்னன் அடிமைப்பணி யில்லான். வாய்மைச் சிறகால் உலகேழும். மண்ணும் காந்திப் பெருமானார் மகிழும் தோழி நீ தானா? நன்றி : பாரதிதாசன் கவிதைகள் - மணிவாசகர் பதிப்பகம், 55 லிங்கித்தெரு, சென்னை 600 001 - இந்தப் பதிப்பில் புதிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன - விலை ரு.17.50 (பிளாஸ்டிக் உறையுடன்)

தேடல் என்கிற கதை..

அழகியசிங்கர் இந்த வார கல்கி இதழில் (18.10.2016) என் கதை தேடல் பிரசுரமாகி உள்ளது.  இக் கதையைப் பிரசுரித்த கல்கி ஆசிரியருக்கு என் நன்றி.  கதைக்கான ஓவியத்துடன் ஒரு கதையைப்  பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கிறது.  இக் கதையை நீங்கள் படிக்க வேண்டும்.  இக் கதை எப்படி வந்திருக்கும் என்பதைப் பற்றி சொல்கிறேன். முடிச்சூர் ரோடில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உள்ளது.  அங்கு ஒரு முறை போனபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் எதிர்பாராதவிதமாய் அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெளிப்படுத்தினார்.  அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அவருடைய கணவர்  திடீரென்று புத்தி பிசகிப் போய்விட்டார்.   வேலையைத் துறந்து பென்சன் வாங்கிக் கொண்டிருந்தார்.  வீட்டிலேயே அடைந்து கிடப்பார்.  ஒரு முறை பென்சன் அலுவலகத்திற்கு கையெழுத்துப் போட அவரை அந்தப் பெண்மணி அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.  அவரை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு உள்ளே அலுவலரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.  அவர் திரும்பி வரும்போது உட்கார்ந்த இடத்தில் கணவரைக் காணோம்.  எல்லா இடங்களிலும் தேடிப் பா

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 29

அழகியசிங்கர்    நேற்றையக் கனவு திரிசடை என் நேற்றையக் கனவில் அந்தப் பாலம் தகர்ந்தது. வெகுநாள் வருந்தி, வியர்வை சிந்தி, கல்லுடைத்து, வெயிலில் வெந்து, பகிர்ந்துகொள்ள எவருமற்ற நிலையில் தனியே ஏங்கி அழுது சிறுகச் சிறுக நான் கட்டி முடித்திருந்த அந்தப் பாலம் நேற்று என் கனவில் தகர்ந்தது மீண்டும் அதைக்கட்ட எனக்குக் காலம் இல்லை. காலம் இல்லையென்றால் கனவேது? கனவு இல்லையென்றால் ஆக்கமேது? என் கனவை உணர்ந்த ஒரு இதயம் எனக்காக அதைக் கட்டும் தன் கனவில். PUBLISHED BY :  THAMIZH SANGAM OF  METROPOLITAN WASHINGTON AND bALTIMORE INC. C/O DR N GOPALSAMY, 11205 GREENWATCH WAY,  NORTH POTOMAC MD20878, U S A

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்.....

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்..... அழகியசிங்கர்  முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம்.  ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார்.  நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன்.  ஆனந்த், ஆர்.ராஜகோபாலன், ராம்மோஹன், ஸ்ரீனிவாஸன் என்று நிறையா நணள்பர்கள் சந்தித்துக் கொள்வோம்.  இந்த முகநூல் அப்போது இல்லை.  இருந்திருந்தால் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு என்ன பேசினோம் என்பதை முகநூலில் பகிர்ந்து கொண்டிருப்போம். எங்கள் எல்லோரையும் விட மூத்தக் கவிஞர் ஞானக்கூத்தன்.  தலைமை என்றெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அவர் தலைமை தாங்கி நடத்துவதுபோல்தான் அந்தக் கூட்டம் நடைபெறும்.  இப்படி எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகளை நான் இனிதாக கழித்திருக்கிறேன்.   ஆனால் இப்போது ஒரு கூட்டம் கூட அதுமாதிரி முடியாது.  அவ்வளவுதூரம் இறுகி விட்டது பொழுது எல்லோருக்கும். ஒருமுறை ஞானக்கூத்தன் எங்களைப் பார்த்துச் சொன்னார். üஇன்று எனக்குப் பிறந்தநாள்ý என்று.  நாங்கள் அவரை வாழ்த்தினோம்.   'இந்தப் பிறந்தநாளில் என்ன பெரிதாக

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 28

அழகியசிங்கர்  எதன் கைதி சமயவேல்  அடிக்கடி வெளியே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இந்த ஜன்னல் அல்லது நிலையோரம் சமையலறை ஜன்னல் பின்வாசல் அல்லது ஓர ஜன்னல் மாற்றி மாற்றி எட்டி எட்டிப் பார்க்கிறேன் அலுக்காமல் தெருவைப் பார்த்தபடியே நிற்கிறேன் அல்லது மொட்டை மாடி ஏறி எல்லாத் திசைகளையும் பார்த்து நிற்கிறேன் எவ்வளவு பார்த்தாலும் வீட்டுக்குள் நுழைந்ததும் திரும்பவும் எட்டி எட்டி நன்றி : அகாலம் - கவிதைகள் - சமயவேல் - பக்கம் : 52 - வெளிவந்த ஆண்டு : மே 1995 - விலை ரூ.12 - சவுத் ஏசியன் புக்ஸ் 6/1 தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை 600 002

யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்?

அழகியசிங்கர் எனக்கு எப்போதும் இந்தச் சந்தேகம் வருவதுண்டு.  முன்பை விட இப்போது தமிழ்ப் புத்தகங்களை யாராவது விரும்பிப் படிக்கிறார்களா என்ற சந்தேகம்தான்.  இது குறித்த நான் பலரிடம் விஜாரிக்க விரும்பவில்லை.  சமீபத்தில் பெஸன்ட் நகர் பீச்சில் காலை 6 மணிக்கு சில இளைஞர்கள் கிட்டத்தட்ட 30 வயதுக்குள் இருப்பவர்கள் பெரும்பாலோர் ஐடியில் பணிபுரிபவர்கள் ஆங்கிலத்தில் கதைகளை வாசித்தார்கள்.  அவர்கள் வாசித்தக் கதைகளின் தரம் அவ்வளவாய் சிறப்பாய் இல்லை.  ஆனால் தமிழில் இதுமாதிரியான கூட்டத்தை நடத்தத்தான் முடியுமா?  யார் தமிழில் எழுதுகிறாரகள்? யார் தமிழ் கதைகளைப் படிக்கிறார்கள்? நானும் சிறி;து முயற்சி செய்து பூங்காவில் கதை கவிதை வாசிப்புக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தினேன்.  அக் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை.  அது நடத்துவது கேலிக் கூத்தாகி விடுமா என்று கூட எனக்குத் தோன்றியது.   இப்போது உள்ள இளைஞர்களில் தமிழ் படிப்பவர்கள் மிக மிக குறைவு.  பொதுவாக பெரும்பாலோர் புத்தகங்களே படிப்பதில்லை. மீறிப் படிப்பவரகள் என்ன புத்தகங்களைப் படிக்கிறார்கள்.  பெரும்பாலோர் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை வாசிக்கிறார்

என்னையும் கவிதை வாசிக்க அழைத்தார்...

அழகியசிங்கர்                                                                                                         நான் கிட்டத்தட்ட 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  185 கவிதைகள் கொண்ட அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 300 பக்கங்கள் வரை இருக்கும்.  ஆனால் விலை ரூ.150 தான்.  புத்தகக் கண்காட்சியின்போது ஒரு சிலர் வாங்குவார்கள்.  என்னிடம் உள்ள அத்தனைப் பிரதிகளும் விற்க இன்னும் 20 புத்தகக் கண்காட்சியாவது நடைபெற வேண்டும்.  அதன்பின் வினோதமான பறவை என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன்.  தெரியாமல் 300 பிரதிகள் அடித்து விட்டேன். பின் புத்தக வெளியீட்டு விழா என்றெல்லாம் நடத்தவில்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பினேன்.  பல பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை.  வரப்பெற்றோம் என்ற தலைப்பில் ஒரு சில பத்திரிகைகள் அக் கவிதைத் தொகுதியைப் பற்றி கண்டு கொண்டது.  என் கவிதைகளைப் பற்றி தமிழவன், நகுலன், வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், ரிஷி போன்ற நான் மதிக்கும் படைப்பாளிகள் எழுதி உள்ளார்கள்.   என் கவிதைத் தொகுதிகளை நான் புரட்டிப் புரட்டிப் பார்ப்பேன். என் கவிதைகளை நானே படித்த