Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 48



அழகியசிங்கர்  

மாலதி
                                                                                               
சங்கர ராமசுப்ரமணியன்


மாலதி
நடந்து செல்லும் வீதிகளில்
வீடுகள்
வினோத சோபை கொள்கின்றன
கனவெனத் தோன்றும்
மஞ்சள் ஒலியை
அறையெங்கும்
நிரப்பிச் செல்கிறாள் அவள்

அவளின்
உடல் மணம் படர்ந்துü
விழிக்கின்றன புராதன நாற்காலிகள்

மாலதி
நகரத்தின் வெளியே
வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு
வெளிறிய கனவொன்றினைக்
கண்டுகொண்டிருக்கக்கூடும்

இல்லையெனில்
தன் அம்மாவின்
இடையில் அமர்ந்து
கோவில் சப்பரத்தை
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கக் கூடும்

நன்றி : மிதக்கும் இருக்கைகளின் நகரம் - கவிதைகள் - சங்கர ராமசுப்ரமணியன் - வெளியீடு : மருதா, கடை எண் : 3, கீழ்த்தளம், ரியல் ஏஜென்ஸி, 102 பாரதி சாலை, சென்னை 600 014 - விலை : ரூ.40 - வருடம் : டிசம்பர் 2001 

Comments