Skip to main content

புகைப்படம் எடுப்பது என் வழக்கம்

              

அழகியசிங்கர்






ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம்.  என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன்.  சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், ஈரோடு தமிழன்பன் என் ஸ்டாலுக்கு வந்திருந்தார்கள்.  என்னால் நம்ப முடியவில்லை.  பொதுவாக புத்தகக் கண்காட்சிதான் பலரை சந்திக்க வழி வகுக்கும்.  

அப்போது நான் புதியதாகக் கொண்டு வந்த மழைக் குடை நாட்கள் என்ற கோ கண்ணன் கவிதைப் புத்தகத்தை காட்டியபடி இன்குலாப் புகைப்படத்திற்குக் காட்சி தருகிறார்.  பக்கத்தில் ஈரோடு தமிழன்பன், பார்வையற்ற கோ கண்ணன் என்கிற படைப்பாளி.  இதை அபூர்வமான நிகழ்ச்சியாகக் கருதுகிறேன்.  

Comments