Skip to main content

Posts

Showing posts from 2017

650 பக்கங்களுக்கு மேல்

அழகியசிங்கர் 62 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம் கொண்ட  üஅழகியசிங்கர் கதைகள்ý என்ற மொத்தப் படைப்புகளுக்கான புத்தகம் கொண்டு வருகிறேன்.  புத்தகக் காட்சிக்குள் வந்துவிடும். 650 பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகம் கெட்டி அட்டைப்ப்போட்டு தயாரிக்கப்பட உள்ளது.    இதன் விலையை ரூ.600 ஆக வைப்பதாக உள்ளேன்.  நான் இதுவரை 12 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  இத் தொகுப்பு என் 13வது தொகுப்பு.   என் முதல் கதையின் பெயர் üசெருப்பு.ý  1978ஆம் ஆண்டு எழுதியது.  ஒரு சிறுபத்திரிகையில்தான் பிரசுரம் ஆனது. அந்தக் கதையைப் படித்துவிட்டு என் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்மணி, 'உங்கள் செருப்பு நன்றாக இருக்கிறது,' என்றாள்.   உடனே நான் என் காலில் மாட்டியிருந்த செருப்பைப் பார்த்தேன்.   'உங்கக் கால் செருப்பைச் சொல்லலை, சார்..  உங்கக் கதையைச் சொல்றேன்,' என்றாள்.  அவள் சொன்னதைக் கேட்டு என் கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். அந்த நேரத்தில அந்தப் பெண்மணி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.   அதேபோல் முதன் முதலாக போராட்டம் என்ற என் குறுநாவல் ஒன்று கணையாழியில் அக்டோப

சமீபத்தில் பங்களூர் சென்றேன்

அழகியசிங்கர் இந்த மாத முதல் வாரத்தில் நான் பங்களூர் சென்றேன். நெருங்கிய உறவினரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக.  அங்கு மூன்று நாட்கள் இருந்தேன்.  ஒரு கல்யாணம் மூன்று நாட்கள் நடப்பதை அறிந்து ரொம்பவும் யோசனை செய்துகொண்டிருந்தேன்.  மூன்று நாட்களாக நடக்கும் திருமணத்தில் ஏற்படும் செலவுகளைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தேன்.  ஆனால் இது குறித்து யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை.  என்னைப் பொறுத்தவரை ஒரு திருமணம் ஒரு நாளிலேயே முடிந்துவிட வேண்டுமென்று நினைக்கிறேன்.   மூன்று நாட்கள் அங்கே இருக்கும்படி இருந்ததால் நான் லேப்டாப் எடுத்துக்கொண்டு போயிருந்தேன்.  அங்கே போய் விருட்சம் 104வது இதழைக்கொண்டு வந்தேன்.  லாப்டாப் மூலம் அச்சடிக்க அனுப்பி அச்சடித்தேன்.   மீதி நாட்களில் புத்தகக் கடைகளுக்குச் செல்ல தீர்மானித்திருந்தேன்.  முன்பு நான் பார்த்த பங்களூர் மாதிரி இல்லை.  முன்பு என்றால் நான் மெஜஸ்டிக் போய் அங்கிருந்து பஸ் பிடித்து எல்லா இடங்களுக்கும் செல்வேன்.  எங்கே போகவேண்டுமென்று ஒரு இலக்கிய நண்பரைக் கேட்டேன்.  அவரும் எனக்குத் துணையாக வந்தார்.  அவர் பெயரைக் குறிப்பிட வேண்

இன்னொரு முறை பார்க்க வேண்டும்....

அழகியசிங்கர் நான் இந்த 15வது சென்னை சர்வதேசப் பட விழாவில் பார்த்த ஒரே தமிழ்ப்படம் 'மனுசங்கடா'.  அம்ஷன்குமார் இயக்கியப் படம் இது. இப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு எனக்குத் தோன்றியது இலக்கிய நண்பர் ஒருவருடன் பல ஆண்டுகளுக்கு முன் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்த குருதத்தின் படம்.  படம் முடியும் தருவாயில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இலக்கிய நண்பர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்.  அவருடைய அழுகை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.  ஒரு சினிமாப்படம் என்பது என்ன? அது நமக்குத் தெரியாத இன்னொருவர் வாழ்க்கையைச் சொல்வது.  அதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும் திகைப்பும் ஏற்படுகின்றன. சிலசமயம் தாங்க முடியாத வருத்தத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. அம்ஷன்குமார் படம் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.   வாழ்க்கையில் தென்படும் சோகம் மனதின் துயரத்தை அதிகரித்துவிடும்.  படம் பார்த்தாலும் இந்த உணர்வு ஏற்படாமல் இருக்காது.  ஆனால் நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வு முக்கியம்.  மனுஷங்கடா படம் கூட ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வரை ஒரு சோக நிகழ்ச்சியை வெளிப்படுத்திய

தஞ்சை ப்ரகாஷ÷ம் நானும் - ஒளிப்படம் 1

தஞ்சை ப்ரகாஷ÷ம் நானும் - ஒளிப்படம் 1 அழகியசிங்கர் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்து 16.12.2017 அன்று  பேசிய பேச்சின் ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன்.  இது மூன்று பகுதிகளாக உள்ளது. 

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

       அழகியசிங்கர்     சில தினங்களுக்கு முன் நான் பங்களூர் சென்றிருந்தேன். நெருங்கிய உறவில் ஒரு திருமணம்.  பங்களூரில் வசிக்கும் ஸிந்துஜாவைச் சந்தித்து அவரைப் பேட்டி எடுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  அந்தப் பேட்டி எடுத்த இடம் வேடிக்கையான இடம்.  அவரை கல்யாணத்திற்கு அழைத்திருந்தேன்.  கல்யாண சத்திரம் முழுவதும் எதாவது தனியாக அமர்ந்து பேச இடம் கிடைக்குமா என்று பார்த்தோம்.  ஒரு இடமும் கிடைக்கவில்லை.  சரி வேற வழி இல்லை என்று ஸிந்துஜா அவர்களின் காரில் அமர்ந்து பேட்டி எடுத்தேன்.       அந்தப் பேட்டியில் சில இடங்களில் எடிட் செய்ய வேண்டியிருந்ததால் நான் உடனடியாக அதை வெளியிட முடியாமல் தவித்தேன்.  அமெரிக்காவிலிருந்து வந்த பையனிடம் கொடுத்து இதைச் சரி செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன்.  அவன் அதைச் செய்ததோடு அல்லாமல் என்னைத் திரும்பவும் பேசச் செய்து அதையும் ஏற்கனவே எடுத்தப் பேட்டியுடன் சேர்த்துவிட்டான்.   என்னதான் முயன்றாலும் இதை என்னால் கற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.  இதோ அந்த ஒளிப்பதிவு.  இந்தத் தலைப்பில் நான் எடுக்கும் 13வது பேட்டி இது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி 3

அழகியசிங்கர் என் 'திறந்த புத்தகம்' பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர்  பேசி துவக்கி வைத்தார்.  எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.  அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும் கேட்டிருப்பீர்கள்.     இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள்.  .இப்போது ஆர் கே ராமனாதன் என்கிற என் நண்பர்.  ஆந்திரா வங்கியில் பணிபுரியும் ஆர் கே ஒரு நாடக நடிகர். திறமையாக நடிப்பவர். நாடகங்களை இயக்குபவர்.  அவர் என் புத்தகத்தைக் குறித்துப் பேசுவதைக் கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  புத்தகத்தின் விலை ரூ.170.  புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

சனிக்கிழமை நடந்த கூட்டம்

அழகியசிங்கர் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் (16.12.2017) நான் கூட்டம் நடத்துவது வழக்கம். நான் என்று சொல்வதை விட என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடத்தும் கூட்டம் என்பதால் நாங்கள் என்று சொல்வது  சரியாக இருக்குமென்று தோன்றுகிறது.   மூகாம்பிகை காம்பௌக்ஸில் ஏழுôவது கூட்டமாக 16ஆம் தேதி ஒரு கூட்டம் நடத்தினேன்.  தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் பற்றி பேசினார்.   வழக்கத்தைவிட கூட்டத்திற்கு வருபவரைவிட இந்த முறை அதிகமாகவே கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.  தஞ்சாவூர் கவிராயரைப் பார்க்கும்போது எனக்கு ஜெயகாந்தான் ஞாபகம் வருவதுண்டு.  அதேபோல் தஞ்சை ப்ரகாஷ் ஸ்டெல்லா புரூûஸ ஞாபகப்படுத்துவார்.   இக் கூட்;டத்தை முழுவதும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.  தஞ்சாவூர் கவிராயர் கூட்டத்தில் பேசும்போதும் ஜெயகாந்தனை ஞாபகப்படுத்தினார். நெகிழ்ச்சியான கூட்டம் இது.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசினார்.  ப்ரகாஷ் தஞ்சாவூரில் ஆற்றிய இலக்கியப் பணியைப் பற்றி கோர்வையாகப் பேசினார்.  ப்ரகாஷ் குறித்து சில புதிய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது.   விருட்சம் சார்பாக
தஞ்சை ப்ரகாஷ÷ம் தஞ்சாவூர் கவிராயர்ரும் அழகியசிங்கர் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் விருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசப் போகிறார். எல்லாவிதங்களிலும் தஞ்சாவூர் கவிராயர் பேசுவது சிறப்பாக இருக்கும்.  ஏனென்றால் ப்ராகஷை பக்கத்ரில் இருந்து பார்த்துப் பழகியவர்.   நான் ப்ராகாஷை இரண்டு மூன்று முறைகள் சந்தித்திருக்கிறேன்.  அவர் உடல்நிலை சரியில்லாதபோது டாக்டர் ரெட்டியிடம்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  டாக்டர் ரெட்டி ஒரு இயற்கை மருத்துவர்.  அவரிடம் போய் சிகிச்சைப் பெறுகிறாரே என்ற எண்ணம் அப்போது எனக்கிருந்தது. கடைசிவரை இலகத்தியத்தைப் பற்றி சிந்தித்திருப்பவர் ப்ராகாஷ்.  சும்மா இலக்கியக் கும்பல் என்ற பெயரில் தஞ்சாவூரில் கூட்டம் நடத்தினார்.  இக் கூட்டதில் கலந்துகொண்டவர்கள் கதைகளைப் படிப்பார்கள்.  பேசுவார்கள்.  எனக்குத் தெரிந்து அவர் ஒரு பத்திரிகை நடத்தினார்.  அந்தப் பத்திரிகையின் பெயர் வெ சா எ.  வெங்கட்சாமிநாதன் ஒருவரே அந்தப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.  இப்படி ஒரு பத்திரிகை நடத்தத் துணிச்சல் வேண்டும்.  ப்ரகாஷ÷ட
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 32வது கூட்டம் பற்றிய அறிவிப்பு. அழகியசிங்கர் தஞ்சை ப்ரகாஷ் குறித்து அவருடைய நெருங்கிய நண்பரான தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் உரை ஆற்றுகிறார்.  வரும் சனிக்கிழமை -16.12.2017.  எல்லோரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  இதோ அதற்கான அழைப்பிதழ்.

மரபு கவிதைகளை ஒழித்தவர் பாரதியார்

அழகியசிங்கர் பாரதியின் பிறந்த தினம் இன்று.  எல்லாவிதங்களிலும் இன்று எழுதிக்கொண்டிருக்கிற கவிஞர்கள் பாரதியாருக்குக் கடமைப் பட்டவர்கள். மரபு கவிதைகளை எழுதிக் குவித்த பாரதியார் ஒரு மாற்றாக வசன கவிதைகளை எழுதினார்.  அதவாது சுதந்திரமான கவிதைகள்.  அக் கவிதைகள்தான் பெரிய மாற்றத்தை தமிழில் இன்று ஏற்படுத்தி உள்ளது. பாரதியாரின் வசன கவிதைகளைத் தொடர்ந்து ந பிச்சமூர்த்தி கொஞ்சம் மரபு கொஞ்சம் புதுவிதமான கவிதை என்று எழுதினார்.  க நா சு முழுவதும் மரபைத் தவிர்த்துவிட்டார். கவிதையில் புதிய உத்தியை கநாசுவும் நகுலனும் ஆரம்பதில் ஏற்படுத்தியவர்கள்.  இன்றும் சிலர் மரபு கவிதைகளை எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது.  ஏன்னெனில் புதுவிதமான கவிதைகள் எழுதுவதில் உள்ள சுதந்திரம் மரபு கவிதைகளில் இல்லை. இன்று அதன் எல்லை தாண்டி எங்கோ போய்க்கொண்டிருக்றது. என்னிடம் 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் உள்ளன.  எல்லாக் கவிதைப் புத்தகங்களும் மரபு கவிதையை உதறிவிட்டு எழுதப்பட்ட புதுவிதமான கவிதைகள். பாரதியாருக்குப் பின் பாரதிதாசன், சுரதா, நாமக்கல் கவிஞர் என்று பலர் மரபு கவிதைகள் எழுதி இருக்கிறார்கள்.  

104வது இதழ் நவீன விருட்சம் வெளிவந்துவிட்டது

அழகியசிங்கர் செப்டம்பர் மாதம் நவீன விருட்சம் 103வது இதழ் வெளிவந்தது. 3 மாதங்களுக்குள் விருட்சம் இதழை எப்படியாவது கொண்டுவர நினைத்துக் கொண்டிருந்தேன்.  இதோ 104வது இதழ் டிசம்பர் மாதம் கொண்டுவந்துவிட்டேன்.   கீழே குறிபபிடப்படுகிற படைப்பாளிகள் நவீன விருட்சத்தை அலங்கரித்துள்ளார்கள். அசோகமித்திரன் - புதிய மரபினைத் தோற்றுவித்த எழுத்தாளர் - கட்டுரை -அம்ஷன்குமார் மரங்களும் மனிதர்களும் - சிறுகதை - வையவன்        வான உள்ளம் - கவிதை -   பிரபு மயிலாடுதுறை       தாமரை பாரதி கவிதைகள்        ஒற்றை வார்த்தை - கவிதை - அதங்கோடு அனிஷ்குமார் எம்.ஜி சுரேஷ் சில நினைவுகள் - அழகியசிங்கர்   நடந்தது என்ன? - சிறுகதை - ஜி பு சதூர்புஜன் லாரா - சிறுகதை - ஜெயராமன் ரகுநாதன் வானிலை அறிக்கை - கவிதை - சிபிச்செல்வன் சுந்திரமித்திரன் கவிதை நெட்டிப் பந்து - கவிதை - லாவண்யா சுந்தர்ராஜன் புதிர் - கவிதை - ஜான்னவி       எழுத்துச் சுவர் - சிறுகதை - பிரபு மயிலாடுதுறை மாற்றம் - சிறுகதை - அழகியசிங்கர்                   ராஜாஜியின் ஜெயில் டைரி

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி 2

என்னுடைய  'திறந்த புத்தகத்திற்கான'  அறிமுக உரை பகுதி 2 அழகியசிங்கர் என் üதிறந்த புத்தகம்ý பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர்  பேசியதை எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.  இதோ வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார்.  இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள்.  வ வே சுப்ரமணியன் விவேகானந்தா கல்லூரியில் முதல்வராக இருந்து பணி மூப்பு பெற்றவர்.  சிறந்த பேச்சாளர்.பல புத்தகங்கள் எழுதி உள்ளார்.  கவிஞர்.  தமிழ் வளர்த்த சான்றோர் என்ற சிறப்பு நிகழ்ச்சியை விடாமல் வெற்றிகராமாக நடத்துபவர்.  புத்தகத்தின் விலை ரூ.170.  புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

மாம்பலம் டாக் பார்த்தீர்களா?

அழகியசிங்கர் இன்று வந்துள்ள மாம்பலம் டாக் என்ற பத்திரிகையில்  போஸ்டல் காலனியில் துவங்கியுள்ள நூல் நிலையத்தைப் பற்றி எழுதியிருந்தது.  இன்னும் சில தகவல்களை சரியாகப் பத்திரிகையில் தரவில்லை.   புத்தகம் படிக்க விரும்புவோர் பதிவு செய்துகொண்டு வரவேண்டும்.  ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒருவர் இருக்கக் கூடாது.  புத்தகம் படிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 செலுத்த வேண்டும்.  புத்தகம் படித்துவிட்டு அங்கயே வைத்துவிடவேண்டும்.  இரவல் கொடுக்கப்பட மாட்டாது.  யாராவது இலவசமாக தங்களுடைய புத்தகங்களை நூல்நிலையத்திற்குக் கொடுக்கலாம்.   விருட்சம் புத்தகங்கள் விற்கப்படும்.  கூடவே மற்றப் பதிப்பாளர்களின் புத்தகங்களும் விற்கப்படும்.  ஆனால் முன்னதாகவே சொல்ல வேண்டும். 10பேர்கள் கொண்ட கூட்டம் நடக்க அனுமதி உண்டு.  ஒரு மணி நேரக் கூட்டத்திற்கு ரூ.100 தரவேண்டும்.   தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 9444113205 மற்றும் 9176613205.   

விசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று

அழகியசிங்கர் நான் பெரிய மனிதர்களைப் பார்ப்பதில் சங்கடப்படுவேன்.  அவர்கள் முன் எப்படி நடந்துகொள்வது என்பது எனக்குத் தெரியாது.  அதாவது சரியாக வராது. அதைவிட நான் போய் பார்க்க விரும்பாதது.  சாமியார்களைப் பார்ப்பது. அவர்கள் முன் நிற்பது எனக்கு சங்கடத்தைத் தரும்.  எதாவது சொல்லி விடுவார்களோ என்று யோசனை ஓடும். ஆனால் தீவிர இலக்கியவாதியான பிரமிள் சாமியார் பின்னால் போனது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  பார்த்தால் இலக்கியத்தைப் பற்றி பேசுவார் என்றால், ஜே கிருஷ்ணமூர்த்தி, ஷீரிடி சாய்பாபா, ரமணர், யோகி ராம்சுரத் குமார் என்று பேசிக்கொண்டிருப்பார்.  எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பூக்கோ, தெரீதா என்றெல்லாம் பேசுவதை விட்டு, சாய்பாபா, ராம்சுரத் குமார் ஜே கிருஷ்ணமூர்த்தி என்று பேசுகிறாரே என்று தோன்றும். ஒருமுறை என்னை திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்.   யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கலாம் என்றார்.  அவருடன் போனதால் சாமியார் என்னைப் பார்த்து எதுவும் சொல்லிவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.  நான் வீட்டிலேயே கூட சொல்லாமால் விசிறி சாமியாரைப் பார்க்க பிரமிளுடன் ச

அஞ்சல் அட்டை என்கிற மகாத்மியம் - 1

அழகியசிங்கர் அஞ்சல் அட்டை எழுதுவோர் சங்கம் என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம். தபால் கார்டு சங்கம் என்று வேண்டாம்.  முகநூலில் ஒருவர் குறிப்பிட்டதுபோல.  நான் ஏன் இது குறித்தே எழுதுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன்.  எனக்குப் பலர் அஞ்சல் அட்டை மூலம் எழுதியிருக்கிறார்கள். கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் பலருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை அஞ்சல் அட்டை மூலம் எளிமையாகத் தெரிவித்து விடுவார்.  ஒவ்வொரு ஆண்டும் எனக்கும் அவர் தெரிவிப்பதுண்டு. ஒருவருக்கு ஏன் நாம்அஞ்சல் அட்டை மூலம் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது.  முதலில் நாம் கணினியை அதிகமாகப் பயன்படுத்தி  கையால் எழுதுவதே விட்டுவிட்டோம்.  நாம் எழுதிப் பழகுவதற்கு தபால் அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.   தபால் அலுவலகத்தில் போய் அஞ்சல் அட்டைகளை வாங்கும் வழக்கம் உள்ளவன் நான்.  ஆனால் அதைப் பயன்படுத்தியதில்லை.  ஒரு இடத்தில் அடுக்கி அடுக்கி வைப்பேன்.   என் பத்திரிகைக்கு சந்தா அனுப்பும் படி முன்பெல்லாம் கார்டு மூலம் கேட்பேன்.  இப்போது ஏனோ அப்படியெல்லாம் கேட்பதில்லை.  இப்படி தபால் அட்டை வாங்கும் மோகம்

சரஸ்வதி வேண்டாம் லட்சுமி வேண்டும்

அழகியசிங்கர் வரும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி அடியேனும் புத்தகங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  டிசம்பர் மாதம் முதற்கொண்டு ஒரே பிரச்கினை.  எனக்கு ஒரு சில நண்பர்கள் உதவி செய்கிறார்கள்.  ஆனாலும் நான் எல்லாவற்றையும் முடிக்க வேண்டும்.  எப்படியாவது ஐந்தாறு புத்தகங்களாவது கொண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இந்தச் சமயத்தில்தான் அச்சடிப்பவர்களுக்கு போன் பேசினால் போனையே எடுக்க மாட்டார்கள்.  அதற்குமுன் நம் முன் கண்ணில் அநாவசியமாகத் தடடுப்படுபவர்கள் இப்போது இந்தத் தருணத்தில் ஏன் என்று கேட்காமல் ஓட்டமாய் ஓடிவிடுவார்கள்.  இது உலக நியதி.   நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகப் புத்தகங்கள் தயாரிப்பதும் விருட்சம் என்ற பத்திரிகையும் நடத்துபவனாக இருக்கிறேன்.  100 இதழ்களுக்கு மேல் சமாளித்துக்கொண்டு விருட்சம் கொண்டு வந்துவிட்டேன்.  அதேபோல் புத்தகங்கள் 70க்கும் மேல் கொண்டு வந்துவிட்டேன்.  100 வரை கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறேன்.  கடந்த சில ஆண்டுகளுக்குமுன் 300 பிரதிகளுக்குக் கீழ் புத்தகங்கள் அச்சடித்து, விற்க முடியாமல் வைத்துக்கொண்டிருக்கிறேன்.  இப்போதுதான் ஒரு தெளி

தபால் கார்டு சங்கம்

அழகியசிங்கர் தபால் கார்டு மூலம் நாம் ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாமென்று தோன்றுகிறது.  இதன் முக்கியக் குறிக்கோள்கள் கீழ் வருமாறு. 1. நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது 2. கார்டில் மட்டும்தான் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். இன்லென்ட் கடிதம் கிடையாது. கவரில் எழுதி அனுப்புவது கிடையாது. 3. போனில் பேசக்கூடாது 4. இ மெயிலில் எதுவும் அனுப்பக்கூடாது 5. கார்டு மூலம் நாம் ஒருவரை ஒருவர் சாடக் கூடாது 6. ஒரு கார்டில் எதுவேண்டுமானாலும் எழுதலாம் 7. கையெழுத்துப் புரியும்படி எழுத லேண்டும் 8. முக்கியமாக அரசியல் பற்றி எழுதக் கூடாது. 9. தமிழ் மொழியில் எழுதுவது சாலச் சிறந்தது.  ஆங்கிலத்திலும் எழுதலாம். உங்கள் அறிவுச் செல்வத்தை கார்டு மூலம் தெரியப்படுத்துங்கள்.  ஆனால் உங்கள் துயரங்களை பயங்களை வெளிப்படுத்தாதீர்கள். நீங்களும் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் முதல் கார்டை என் முகவரிக்கு அனுப்பும்படிக் கேட்டுக் கொள்கிறேன். என் முகவரி : அழகியசிங்கர் சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ் 7 ராகவன் காலனி மேற்கு மாம்பலம் சென்னை 600 033

கார்டில் எழுதுகிறேன்

கார்டில் எழுதுகிறேன் அழகியசிங்கர் நவீன விருட்சம் இதழ் 103 பிரதிகளை எடுத்துக்கொண்டு மேற்கு மாம்பல தபால் நிலையத்தில் அனுப்பும்போது அஞ்சல் அட்டையைப் பார்த்தேன்.  100 அஞ்சல் அட்டைகளை வாங்கினேன்.   அஞ்சல் அட்டைகளை சீட்டுக் கட்டுப்போல் புரட்டிக்கொண்டிருந்தேன்.  அஞ்சல் அட்டை என்ற பெயரை கார்டு என்று மாற்றி எழுதவிரும்புகிறேன்.  மன்னிக்கவும். கார்டு வாங்கிவிட்டோம்.  என்ன செய்வது? யோசித்தேன்.  யாருக்காவது கடிதம் எழுதினால் என்ன?  என்ன எழுதுவது?  யாருக்கு எழுதுவது?  என் நண்பர் ஒருவர் ஓராண்டிற்கு மேல் படிக்கிறேன் என்று என்னிடம் புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டு என் புத்தகத்தைத் திருப்பியும் தராமல் டபாய்த்துக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு ஒரு கார்டு எழுதினேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.   எப்படியும் அவருக்கு அதிகம் கடிதம் எழுதும்படி எனக்குத் தோன்றியது.  அதனால் பல கார்டுகள் எழுத நமக்கு சந்தர்ப்பம் கிடைக்குமென்று சந்தோஷமாக இருந்தது.  அப்படியும் அவரிடமிருந்து என் புத்தகம் கிடைக்குமா என்று தெரியவில்லை.   என் இன்னொரு நண்பர் ஒருவருக்கு üரமண அருள் வெள்ளம்ý என்ற புத்தகத்தைப் படிக்

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் - ஒளிப்படம் 2

அழகியசிங்கர் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் ராஜேஷ் ஆற்றிய உரையின் முதல் பகுதியை நேற்று முகநூல் நண்பர்களுக்கு அளித்தேன்.  இதோ இரண்டாவது பகுதியை அளிக்கிறேன்.   என்னுடைய சோனி காமிராவில் இவ்வளவு தூரம் படம் பிடிக்கலாமென்று முன்னதாகவே தெரிந்திருந்தால் பலவற்றைப் படம் பிடித்திருப்பேன்.  இந்தக் காமெரா மூலம் நேரிடையாகவே இந்தக் கூட்ட.த்தை உலகம் முழுவதும் பலரும் ரசிக்க முடியும்.  ஆனால் ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்க வேண்டும்.

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் - ஒளிப்படம் 1

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் - ஒளிப்படம் 1 அழகியசிங்கர் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும்  என்ற தலைப்பில் ராஜேஷ் சுப்பிரமணியன் நிகழ்த்திய உரையின் முதல் ஒளிப்படத்தை இங்கு அளிக்கிறேன்.   வகுப்பில் பாடம் நடத்துவதுபோல் ராஜேஷ் போர்டில் சில வரைப்படங்கள் எல்லாம் வரைந்து லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை விளக்கி உள்ளார்.  அவர் முயற்சிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.  இதை நீங்கள் கண்டு களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  

விருட்சம் 31வது கூட்டம்

அழகியசிங்கர் நேற்று (18.11.2017) விருட்சம் 31வது கூட்டம் வழக்கம்போல ஸ்ரீராம் காம்பளெக்ஸில் நடந்தது.  கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியவர் ராஜேஷ் சுப்பிரமணியன்.  சில மாதங்களுக்கு முன் தற்செயலாக ராஜேஷ் அவர்களைச் சந்தித்தேன்.  அவர் பேசும் விதம் பிடித்திருந்தது.  பல விஷயங்களைப் பற்றி பேசினார்.  நான் கூட்டங்களுக்கு வருவதற்கு முன்னாலே  வந்திருந்து எந்தவித நோக்கமும் இல்லாமல் உதவி செய்யக் கூடியவர்.  அவரிடம் நீங்கள் பேச முடியுமா என்று கேட்டேன்.  அவர் ஒப்புக்கொண்டு லத்தீன்  அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றி பேச ஒப்புக்கொண்டார். நான் இதுவரை 6 கூட்டங்களை நடத்தி உள்ளேன்.  முதல் கூட்டம் ஜøன் மாதம் நடந்தது.  திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தி ஜானகிராமனைப் பற்றி பேசினார்.  அடுத்து ஜøலை மாதம் நடந்த கூட்டத்தில் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றி பெருந்தேவி அவர்கள் பேசினார்கள்.  மூன்றாவது கூட்டமான ஆகஸ்டில் கடற்கரை அவர்கள் ஏ கே செட்டியாரைப் பற்றி பேசினார்.  நான்காவது கூட்டமான செப்டம்பரில் செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ஓஷோவைப் பற்றிப் பேசினார்.  ஐந்தாவது கூட்டமான அக்டோபரில் சந்தியா நடராஜன் திருவசாகத்த

விருட்சம் இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்          விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தரும் அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.  இந்த முறை ரஜேஷ் சுப்பிரமணியன் அவர்கள் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.  வழக்கம்போல் மூன்றாவது சனிக்கிழமை (18.11.2017) மாலை 6ரிருந்து 7.30க்குள் கூட்டம் முடிந்துவிடும்.  சமீப காலத்தில் நான் நிகழ்த்தும் இக்கூட்டங்களில் சிறப்பான முறையில் ஒவ்வொருவரும் பேசுகிறார்கள்.  தொடர்ந்து புதுமையான முறையில் இக் கூட்டங்களை நாம் நடத்திச் செல்லவேண்டும்.  அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம் தேவை.  

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை அழகியசிங்கர் சமீபத்தில் வெளிவந்த என் புத்தகத்தின் பெயர் 'திறந்த புத்தகம்.' 200 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம்.  இது கட்டுரைகளின் தொகுப்பு. எல்லாக் கட்டுரைகளும் அதிகப் பக்க அளவு போகாதவாறு எழுதப்பட்டவை. கிட்டத்தட்ட 50 கட்டுரைகள் கொண்ட புத்தகம்.  இப் புத்தகத்தின் விலை : Rs..170. இப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி  என் நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியன்  பேசி உள்ளார்.  அதேபோல் இன்னும் சிலரும் பேச உள்ளார்கள்.  புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....11

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....11 தமிழவன் பேட்டி அளிக்கிறார். பேட்டி எடுத்தவர் : அழகியசிங்கர் இந்தத் தலைப்பில் இதுவரை 11 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன்.  இன்று 12.11.2017 (ஞாயிறு) தமிழவனின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்குச் சென்றேன்.   கூட்ட முடிவில் அவரைப் பேட்டி எடுத்தேன்.  அவரிடம் நான் கேட்ட கேள்விகள் பின்வருமாறு: 1. முதலில் உங்கள் எழுத்துப் பணி எப்படி ஆரம்பித்தது? 2. பத்திரிகையில் உங்கள் படைப்பு எப்போது எதில் முதலில் வந்தது? 3. இதுவரை எத்தனை நாவல்கள், சிறுகதைகள் எழுதி உள்ளீர்கள்? 4. கோட்பாடு ரீதியாக விமர்சனத்தைத் தமிழில் ஏன் இந்திய அளவில் நீங்கள்தான் தொடங்கினீர்களா? 5. உங்களுக்கு எதாவது பரிசு கிடைத்துள்ளதா? 6. எப்படி நீங்கள் ஒரு தமிழ் பேராசிரியாக இருந்துகொண்டு படைபாளியாகவும் உள்ளீர்கள்? 7. உங்கள் இலக்கிய முயற்சிக்கு உங்கள் குடும்பத்தினர்கள் ஆதரவு தருகிறார்களா? 8.  இப்போது உள்ள தமிழ்ச் சூழல் எப்படி உள்ளது? 9. சிறுபத்திரிகை என்ற ஒன்றை இன்னும் தொடர்ந்து கொண்டு வர முடியுமா? 10. இதுவரை நீங்கள் எழுதிய படைப்புகளில் எது சிறந்த படைப்பு?

தெரியாமல் திரு;ட்டுப் புத்தகங்களை வாங்கிவிட்டேன்

அழகியசிங்கர் எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரு பெரிய பஞ்சமுக ஆஞ்சிநேயர் படம் உள்ளது.   பெரிய படம்.  அவரிடம் மண்டிப்போட்டு வேண்டிக்கொண்டேன்.  நான் இனிமேல் புத்தகங்களை வாங்காமல் இருக்க வேண்டுமென்று.  இரண்டு பிரச்சினைகளில் நான் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்.  ஒன்று புத்தகங்களை வாங்காமல் இருக்க என்னால் முடியவில்லை.  இரண்டாவது பிரச்சினை அப்படி வாங்குகிறப் புத்தகங்களைப் படிக்கவே முடிவதில்லை. எங்கள் வீட்டில் உள்ளவர்கள் வன்முறைக்கு ஆளாகி விடுவார்கள் என்று பயப்பட வேண்டி உள்ளது.    நான் வாங்கிக்  குவிக்கும் புத்தகங்களைப் பார்த்து ஒரு பெரிய பிரளயமே வீட்டில் வெடிக்கப்போவதாக நினைக்கிறேன்.  அதனால்தான் பஞ்சமுக ஆஞ்சிநேயரை வணங்குகிறேன். எங்கள் மாம்பல பகுதியில் பலர் திடீர் திடீரென்று வீடுகளைக் காலி செய்துகொண்டு போய்விடுகிறார்கள்.  இன்னும் சிலர் இருக்கிற வீட்டைவிட்டு சின்ன வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்.  ஒரு குடும்பத்தில் புத்தகம் படிப்பவர் ஒருவர் நோய்வாய்பட்டு இல்லாமல் போகும் சூழ்நிலையில் அவர் வைத்துவிட்டுப் போன புத்தகங்களை ஒழித்துக் கட்ட முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வ