Skip to main content

தனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

தனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.


அழகியசிங்கர்





நகுலன் 1968ஆம் ஆண்டு மே மாதம் ஒரு இலக்கியத் தொகுப்பு கொண்டு வந்தார்.  அத் தொகுப்பின் பெயர் குருúக்ஷத்ரம் என்று பெயர்.  அத் தொகுப்பில் பல முக்கிய இலக்கிய அளுமைகள் பங்கு கொண்டுள்ளனர்.  மௌனி, பிரமிள், நீல பத்மநாபன், ஐயப்பப்ப பணிக்கர், நகுலன், சார்வாகன், அசோகமித்திரன் போன்ற பலர்.  அதில் ஒரு பெயர் எஸ் ரெங்கராஜன்.  அவர் ஒரு கதை எழுதி உள்ளார்.  அக் கதையின் பெயர் 'தனிமை கொண்டு.'. 
இக் கதையை எழுதியவர் வேறு யாருமில்லை.  சுஜாதா என்ற எழுத்தாளர்தான்.  17வயது பெண் எழுதிய டைரி மூலம் கதையை நகர்த்திக் கொண்டு போகிறாள்.  அண்ணனும் தங்கையும்.  தங்கையை தனியாக விட்டுவிட்டு அடிக்கடி அண்ணன் டூர் விஷயமாகப் போகிறான்.  அவளுடைய தனிமை அவளுக்கு கிருஷ்ணன் என்ற நபர் மூலம் ஏற்பட்ட துயரம்தான் இந்தக் கதை.  வித்தியாசமான நடையில் வித்தியாசமாக எழுதப்பட்ட கதைதான் இது.  
குருúக்ஷத்ரம் என்ற தொகுப்பில் வெளிவந்த கதைகளில் இக் கதை வித்தியாசமானது.  இக் கதையை 1968ஆம் ஆண்டில் சுஜாதா எழுதி உள்ளார்.  அப்போது அவர் தொடர் கதை குமுதத்தில் வெளிவந்ததா? பிரபலமானவரா என்பது தெரியவில்லை.
இந்தக் கதையைப் படிக்கும்போது சுஜாதா கதை எழுதுவதில் திறமையானவர் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். மாலா என்ற 17வயது பெண்ணின் டைரியைப் படிக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.
மாலா டைரியில் இப்படி எழுதுகிறாள் :
‘’முதல் தடவை.  முதல் தடவை.  என் வாழ்க்கைலே முதல் தடவை என்னை வேற ஒருத்தன் தொட்ட முதல் தடவை.  உடம்பு எவ்வளவு ஜ்ர்ய்க்ங்ழ்ச்ன்ப்.  நான் என்னை குளிக்கிறபோது எவ்வளவு தடவை தொட்டுக்கறேன்..அண்ணா மேலே படறபோது ஒண்ணும் தெரியல்லையே...கிருஷ்ணன் இன்னிக்கு என் கன்னத்தைத் தட்டி கையை முழங்கைக்கு மேலே பிடித்து அழுத்தினான்.  எவ்வளவு வித்யாசமா இருந்தது?
எஸ் ரங்கராஜன் பற்றி நகுலன் இப்படி எழுதி உள்ளார்.  நான்  சமீபத்தில் படித்த எழுத்தாளர்களில் எஸ் ஆர் ஒரு புதிய திருப்பத்தைச் சிறுகதையில் காண்பித்திருக்கிறார் என்பது என் அனுமானம்.  üüதீபýýத்தில் வந்த அவர் கதை ஞாபகம் வருகிறது.  நடை உருவமாக மாறுகிறது அவர் கதையில்.  இங்கு வரும் கதையிலிருந்து சில பகுதிகள் :
"கிருஷ்ணா நீ புலி.  நிழலிலே பதுங்கற புலி."
"கிருஷ்ணன் என் மேலே புயல்போல வீசிண்டிருக்கான்.  அவன் என் மனசிலே ஜொலிக்கிறான்.  என் வயிற்றிலே பயமாப் பரவறான்.  என் உடம்பிலே ரத்தமா ஓடறான்."
ஆழ்வாராதிகள் அழுது அரற்றி ஊன் கரைய உருகிப் பாடிப் பரவிய அவன் பெயரும் கிருஷ்ணன் தான் என்பது ஞாபகம் வருகிறது என்கிறார் நகுலன்.  
குருúக்ஷத்ரம் இலக்கிய மலரில் வெளிவந்த இந்தக் கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

Comments