Skip to main content

Posts

Showing posts from May, 2018

ஓர் உரையாடலும் ஒரு கடிதமும்.....

அழகியசிங்கர்  அழகியசிங்கர் மதியம் 4 மணிக்குமேல் பூங்காவில் மர நிழலில் காத்துக்கொண்டிருக்கிறார்.  அவரை நோக்கி ஜெகனும், மோகினியும் வருகிறார்கள். மூவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரும் சில மணித்துளிகள் பேசவில்லை. அழகியசிங்கர் : நடந்திருக்கக் கூடாது. மோகினி : நம் கையில் எதுவுமில்லை ஜெகன் : துப்பாக்கிச் சூடு நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கமே இல்லை.  அழகியசிங்கர் : இப்படி ஒரு துயரமான நிகழ்ச்சி நடந்திருக்கக் கூடாது. மோகினி : நம்மால் என்ன செய்ய முடியும்.  நாமும் சாமானியர்கள். ஜெகன் : சாமானியர்களுக்கு உள்ள தைரியம் கூட நமக்குக் கிடையாது. அழகியசிங்கர் : துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்தனை செய்கிறேன். ஜெகனும், மோகினியும் : நாங்களும்.                                                           *********** ஜெகன் : பாலகுமாரன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டாரே? மோகினி : ஆமாம்.   அழகியசிங்கர் : 200க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி உள்ளார்.  சிறுகதைகள் எழுதி உள்ள

பாவண்ணனைப் பாராட்டுவோம்

அழகியசிங்கர் வரும் சனிக்கிழமை (26.05.2018)  பாவண்ணனைக் குறித்து ஒரு கூட்டம் நடைபெற உள்ளது.  காலை பத்து மணியிலிருந்து இரவு 8 மணிரை.   இடம் கவிக்கோ அரங்கத்தில்.  பாவண்ணன் சிறுகதைகள், நாவல்கள், அவருடைய மொழிபெயர்ப்புகள் என்று பல்வேறு தலைப்புகளில் பலர் பேச உள்ளார்கள். நான் பாவண்ணன் என்ற உடன் அவருடைய புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன்.  என்னிடம் 3 புத்தகங்கள் இருக்க வேண்டும். இரண்டு புத்தகங்கள்தான் இருந்தன.  பாய்மரக்கப்பல் என்ற நாவல் எங்கே என்று தெரியவில்லை.  'அடுக்கு மாளிகை' என்ற சிறுகதைத்  தொகுதியும், ஒரு கவிதைத் தொகுதியும் தான் இருந்தன. டிஸ்கவரி புத்தக பேலஸ் இடத்திற்குச் சென்றபோது பாவண்ணனின் இரண்டு நாவல்கள் கண்ணில் தென்பட்டன.  வாங்கி வைத்துக்கொண்டேன்.  அப்போதுதான் தெரிந்தது பாவண்ணன் நாவல்கள் மூன்று எழுதியிருக்கிறாரென்றும், சிறுகதைத் தொகுப்பு பத்து பதினைந்து கொண்டு வந்திருக்கிறாரென்றும்,  இதைத் தவிர கட்டுரைத் தொகுதிகளும் கவிதைத் தொகுதியும் வந்திருக்கின்றன.   புத்தகங்கள் வைத்திருந்தாலும் நான் பாவண்ணனை பத்திரிகைகளில் வரும் கதைகள் மூலமாகத்தான் படித்திருக்கி

ஒரு கவிதை

அழகியசிங்கர்         அய்யனாரைக் கேட்கிறேன் அய்யானரைக் கேட்கிறேன் நியாயமா அய்யனாரே திக்கற்று சுழன்றோடும் போராட்ட மக்களைச்சுடுவது அய்யனாரே ஏன் இப்படி நடந்தது கையில் ஆயுதமின்றி எதிரில் நிற்கும் மக்களைச் சுடுவது என்ன நியாயம்? சுடுபவனுக்கு மனித மனம் இல்லையா? குடும்பம் இல்லையா எங்கும் காக்கை குருவி சுற்றுகின்றன அய்யனாரே ஏன் இப்படி நடக்கிறது போராடும் மக்களைக் கூப்பிட்டு நாலு வார்த்தைப் பேசாமல் சுடலாமா? யார் பிடிவாதம் பிடிக்கிறார் அய்யனாரே செய்தியை அறிந்தவுடன் மனம் பதறி விட்டது நாம் இருக்கும் இடத்திலா அய்யனாரே மன்னிக்க முடியாத குற்றம் அய்யனாரே யார் கேட்பது அய்யனாரே?  நீர் கேட்பீரா அய்யனாரே...

நடிகையர் திலகம் என்ற படம் பார்த்தேன்

அழகியசிங்கர் ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் போது, அதில் எந்த அளவிற்கு உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம்.    உண்மையைப் போல பொய்யும் பொய்யைப் போல உண்மையும் தென்படும்.  உண்மை 10% விதத்திற்கு மேல் இருந்தால் பெரிய விஷயம்.   வரலாற்றை எடுக்கும்போது சில கற்பனை காட்சிகளையும் கலக்க வேண்டும்.  முழுமையான உண்மை வரலாறு பார்ப்பவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும்.  சாவித்திரி குறித்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளராக வரும் மதுர வாணியாகசமந்தாவின் பாத்திரம் படத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.   இந்தப் படத்தில் ஜெமினிகணேசனை வில்லனாகச் சித்தரித்திருக்கிறார்கள்.  வில்லன் என்று எதாவது உண்டா என்பது தெரியவில்லை.   அதேபோல் ஹ÷ரோ என்று சொல்லப்படுவதை ஹ÷ரோவாகக் காட்ட முடியுமா?  வாழ்க்கைப் பாதையில் யாருமே ஹ÷ரோ கிடையாது  அதேபோல் யாருமே வில்லனும் கிடையாது.   புகழ் உச்சிக்குச் சென்ற நடிகை சாவித்திரியின் மோசமான நிலை பார்ப்பவரை சலனப்படுத்தும் விதமாகப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர் நடிகை வாழ்க்கையில் குடிப்பது சாதாரண நிகழ்

தினமணி கதிரில் என் கதையைப் படிக்கவும்

தினமணி கதிரில் என் கதையைப் படிக்கவும் அழகியசிங்கர் இன்று தினமணி கதிரில் என் கதை 'ஆண்களைப் பார்த்தாள் நம்ப மாட்டாள்,' என்ற கதை பிரசுரமாகி உள்ளது.  தினமணி-எழுத்தாளர் சிவசங்கரி  சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசுப் பெற்ற கதை.  இது ஒரு வித்தியாசமான கதை.  இதைப் படித்து உங்கள் கருத்துக்களை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.  கருத்தைப் பகிர்ந்தால் எனக்கு ஒரு துளி சந்தோஷம் கிடைக்கும். ஒரு விதத்தில் இந்த தினமணி கதிரை நான் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.  ஏன்னென்றால் அட்டையில் பாலகுமாரன் படத்துடன் இதழ் வந்துள்ளது. முன்பு ஒரு முறை தினமணி கதிரில் என் கதை வந்திருந்தது.  அந்தத் தினமணி கதிரில் அட்டையில் எம்.ஜி.ஆர் படம்.  அது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு.
நண்பர்களே, விருட்சம் நடத்தும் 36வது கூட்டம் இது.  எழுத்தாளர் சா கந்தசாமி என் நெடுநாளைய நண்பர்.  எந்தப் பந்தாவும் இல்லாத அதே சமயத்தில் திறமையான எழுத்தாளர்.   இன்று மாலை ஆறு மணிக்கு சுனில் கிலநானியின்  இந்திய என்கிற கருத்தாக்கம் புத்தகம் பற்றி பேசுகிறார்.   இந்தப் புத்தகம் பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன்.  üஐடியா ஆப் இந்தியாý என்ற ஆங்கில நூலிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் அக்களூர் இரவி. 336 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.315.  ரூ.260 க்கு இப் புத்தகம் கூட்டம் நடக்கும் இடத்தில் விலைக்குக் கிடைக்கும்.  ஆங்கிலத்தில் இப் புத்தகத்தைப் படித்த முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம், இது மாதிரியான புத்தகங்கள் தமிழில் வருவது நல்லது என்று குறிப்பிட்டிருக்கிறார்.  
விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 36வது கூட்டம்.  அது குறித்து அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.  எல்லோரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்பன் அழகியசிங்கர் 9444113205

பாலகுமாரனின் 'இது போதும்'

அழகியசிங்கர் 100வது இதழ் நவீன விருட்சம் தயாரித்து பலருக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.  அந்த இதழ் அதிகப் பக்கங்களுடன் தயாரிக்கப்பட்டதால் செலவு அதிகமாகிவிட்டது.   ரகு மூலம் அந்த இதழ் பாலகுமாரன் கண்ணிலும் பட்டது.  உடனே அவரிடமிருந்து எனக்கு ஒரு போன்.  அப்போது நான் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அவசரம் அவசரமாகப் போய்க்கொண்டிருந்தேன்.  üநாளைக்கு வீட்டிற்கு வர முடியுமா,ý என்று கூப்பிட்டார். அவர் வீட்டிற்குச் சென்றேன்.  அவர் வீட்டின் பெரும்பகுதி ஒரு கோயில் மாதிரி இருந்தது.  யோகி ராம்சுரத்குமாரின் பெரிய புகைப்படங்கள்.  பூஜை அறையில் யோகி ராம்சுரத்குமார்.   அவருடைய வெண்ணிற தாடி அவர் மீது எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.   முன்பு பிரமிளுடன் நான் யோகி ராம்சுரத்குமாரை சந்தித்த விபரத்தைத் தெரிவித்தேன்.  அங்கு நடந்த சில சங்கடமான விஷயங்களை அவரிடம் தெரிவித்தேன். உருக்கமாக.  அவர் சாதாரணமாக அதைக் கேட்டு விளக்கிக்கொண்டிருந்தார்.  யோகி ராம்சுரத்குமாருக்கு உங்கள் மீது எந்தக் கவனமும் இல்லை என்றார்.  நன்கொடையாக விருட்சம் இதழுக்கு பணம் அளித்தார்.  அவர் இன்னொன்றும் சொன்னார்.  

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 7

அழகியசிங்கர் 1. 105வது இதழ் வரை விருட்சம் கொண்டு வந்து விட்டீர்கள்?  ஆமாம்.  84 பக்கங்கள் வரை கொண்டு வந்துள்ளேன்.  விலை அதிகம். 2. நீங்கள் 30 ஆண்டுகளாகக் கொண்டு வந்துள்ளீர்கள்..அவ்வளவு நீண்ட காலம் ஒரு சிறு பத்திரிகையைக் கொண்டு வரக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே? அப்படி சொல்பவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்.  முதல் இதழுக்கும் கடைசி இதழுக்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் கூறுவார்கள். 3. வித்தியாசம் இல்லையா? இல்லை.  முதல் இதழும் கடைசி இதழும் எல்லாம் ஒன்றுதான். கவிதைகள், கதைகள், கட்டுரைகளைப் பதிவு செய்யும் ஒரு இயந்திரமாகத்தான் சிறுபத்திரிகையைக் கருதுகிறேன். 4. உங்கள் பத்திரிகையைப் படிப்பவர்கள் இருக்கிறார்களா? இருக்கிறார்கள்.  யார் என்று தெரியாது.  கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்ய மாட்டார்கள். 5. எல்லா சிறு பத்திரிகைக்கும் இந்தக் கதிதானா? இப்போது வருகிற எல்லாச் சிறுபத்திரிகைக்கும் இந்தக் கதிதான். 6. ஆத்மாநாம் இப்போது இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பார்? ழ பத்திரிகையின் 200வது இதழ் கொண்டு வந்திருப்பார்.  16 பக்கங்களில் தொடர்ந்து கவிதைகாளக வெளிப்படு

திருச்சி பயணத்தில் இன்னொரு புத்தகம்

அழகியசிங்கர் என் பயணத்தின்போது புத்தகங்களைப் படிப்பது என் வழக்கம்.  எல்லோரும் என்னைக் கவனிக்கும்படி புத்தகத்தைப் பிரித்துப் படித்துக்கொண்டிருப்பேன்.  அப்படிப் படித்துக்கொண்டிருக்கும்போது என்னைச் சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்பதையும் கவனித்துக்கொண்டிருப்பேன்.  ரயில் பயணித்தின்போது ஜன்னல் வழியாகப் பல காட்சிகளையும் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் இப்படிப் புத்தகம் படிப்பதே என்னை யாராவது பார்த்து, அவர்களுக்கும் புத்தகம் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதுதான்.  இந்தப் பயணத்தின் போது பாரதி விஜயம் புத்தகத்தோடு இன்னொரு புத்தகமும் எடுத்துக்கொண்டு போனேன்.  அந்தப் புத்தகத்தின் பெயர் üவெயிலும் நிழலும்,ý என்கிற பிரமிள் புத்தகம்.  51 கட்டுரைகள் கொண்ட இப் புத்தகத்தில் 25 கட்டுரைகள் வரை படித்துவிட்டேன்.  இப் புத்தகத்தை வெளியிட்டவர் வம்சி புக்ஸ். இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.  பிரமிள் 1939ல் பிறந்து 1997ல் இறந்து விட்டார்.  அவருடைய முதல் கட்டுரை எழுத்துவில் 1960ல் பிரசுரமாகி உள்ளது.  அப்போது அவருக்கு வயது 21 இருக்கும். அவரு

திருச்சி பயணமும் என் புத்தகப் பயணமும்

அழகியசிங்கர் சில தினங்களுக்கு முன் நான் திருச்சி சென்றேன்.  என் பெண்ணை அழைத்துக்கொண்டு.  பல்லவன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் வண்டியில்  ஏகப்பட்டக் கூட்டம்.  ஒரு சீட்டில் நான் உட்கார்ந்து இருந்தாலும் நின்றுகொண்டு பல பயணிகள் இருந்தார்கள்.  வெயில் புழுக்கம்.  அது மோசமான ரயில் பயணம் என்று எனக்குத் தோன்றியது.  நான் எப்போதும் பயணம் மேற்கொண்டால் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன்.  இப்படி பயணத்தின்போதுதான் விழுந்து விழுந்து புத்தகங்களைப் படித்துக்கொண்டு போவேன்.  பொதுவாக புத்தகங்களைக் குறித்து எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி உண்டு.  புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் படிப்பதில்லை என்று.  அந்தக் குற்ற உணர்ச்சியைப் போக்கவே பயணத்தின்போது புத்தகங்களை ஒரு ஜோல்னாப் பையில் சுமந்து செல்வேன். என்ன புத்தகங்களைப் படிக்க எடுத்துக்கொண்டு போவது என்ற குழப்பம் எனக்கு ஏற்படாமல் இருக்காது.  கடைசி நிமிடம் வரை யோசித்துக்கொண்டிருந்தேன்.  என் புத்தக வரிசையில் 'சிதைந்த கூடு' என்ற தாகூரின் புத்தகம் ஒன்று இருந்தது.  அதன்பின் 'நிலவு தேயாத தேசம்' என்ற சாரு நிவேதிதா புத்தகம்

105வது இதழ் நவீன விருட்சம் வந்து விட்டது....

அழகியசிங்கர் நவீன விருட்சம் 105வது இதழ் வந்துவிட்டது.  உண்மையில் மார்ச்சு மாதம் வந்திருக்க வேண்டும்.  கொண்டு வர முடியவில்லை. ஏப்ரல் முதல் வார்த்திலாவது எப்படியாவது முடித்திருக்க வேண்டும்.  முடியவில்லை.  மே மாதம்தான் முடிந்திருக்கிறது.  என் மேலேயே எனக்குக் கோபம்.  ஏன் முடிக்கமுடியவில்லை என்று.  பத்திரிகையை ஆரம்பித்து முடிக்கும்போது ஒருவித ரிதம் உருவாகிறது.  அப்படியே  அதைக் கொண்டு போனால் எளிதாக பத்திரிகையை முடித்துவிடலாம்.  பத்திரிகையை முடித்தவுடன் என் கவனம் சிதறி விடுகிறது.  பத்திரிகையை அனுப்புவதில் பல நாட்கள் எடுத்துக்கொள்கிறேன்.  பத்திரிகையை உருவாக்கும் ரிதம் சிதறி விடுகிறது.  ************ இதோ பத்த்திரிகையை எடுத்துக் கொண்டு வருகிறேன்.  யார் கண்ணிலும் படாமல் ஜாக்கிரதையாகத்தான் எடுத்துக்கொண்டு வருகிறேன்.  இந்த முறை 7 பன்டில்.  என் வீட்டில் உள்ளவருக்கு இந்தப் பன்டில் கண்ணில் படாது. படக்கூடாது.  நான் விருட்சம் 105 வந்து விட்டது என்று உற்சாகமாகக் கத்துகிறேன்.  என்னை அறியாமல். இன்னொரு குரல் பலமாக ஒலிக்கிறது.  üஎப்போது நிறுத்தப் போகிறீர்கள்?ý  இதோ என் வீட்